சனி, 9 ஜூன், 2012

மெகா கவிதை 25 - நாட்டு நடப்பு (கடைசி பாகம் 9)


உலகின் ஏதோ மூலையில் நடைபெறும் கால்பந்து,கிரிகெட் போட்டிகளை
கண்டு களிக்க தொலைக்காட்சி மூலம் நேரடி ஒளிபரப்பு;
வெகுமதி பெறுவதற்கு அரசு ஊழியர்கள் நடத்தும் வேலை
நிறுத்தத்தால் எங்கும் கடை அடைப்பு;

நவீன தொழில் நுட்பத்திற்கு கிடைத்த ஞாபக சின்னம் தான்
சின்னஞ்சிறு அலைபேசி கண்டுபிடிப்பு;
சாலை விதிமுறைகளை மற்றும் சட்ட ஒழுங்கை கடைபிடிக்க
மக்களுக்கு ஏன் இவ்வளவு களைப்பு;

ஆன்மீக சிந்தனையில் பக்தி மார்க்கம் தேடி நடக்கும் சந்நியாசிகள்
சொந்த-பந்த,சுக-போகங்களை அர்பணிப்பு;
தவழும் குழந்தைகளுக்கு மற்றும் தள்ளாடும் முதியோர்களுக்கு
தர வேண்டும் அலட்சியமில்லாத கண்காணிப்பு;
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளம் எனப்படுவது
தரம் வாய்ந்த நாணயமுள்ள பொருட்களின் தயாரிப்பு;

(1௦௦ வது வரி) - அட்டவணை போட்டு வைத்தாலும் நிர்ணயிக்கமுடியாத
சுற்றுப்புற சூழல் நிகழ்வுகளை, ஒவ்வொரு வினாடியில் தோன்றும்
முடிவுகள் இல்லாத மாபெரும் மாற்றங்களை மற்றும் மக்கள்
எதிர்பார்க்காமல் ஏற்ப்படும் எல்லைகள் இல்லாத திடுக்கிடும்
சம்பவங்களை தண்டோரா போட்டு சொல்லும்
தொடர் வண்டி தான் இந்த நாட்டு நடப்பு !!!!!!!!!!!!!!!

மெகா கவிதை நாட்டு நடப்பு - முற்றும் :)

மீண்டும் என்னோட ஐம்பதாவது கவிதை மாபெரும்
நட்சத்திர தொடர் கவிதையாக உலா வரும்,
அது வரை உங்களிடம் இருந்து விடைபெறுவது,
சிவசுப்பிரமணியன் **

வெள்ளி, 8 ஜூன், 2012

மெகா கவிதை 25 - நாட்டு நடப்பு (பாகம் 8)


உலகின் அமைதியை எப்பொழுதும் சீர்குலைக்கும் வகையில்
ஆங்காங்கே தொடர் குண்டு வெடிப்பு;
தஞ்சம் என்று நம்பி வரும் அகதிகளுக்கு அடைக்கலத்துடன்
கொடுக்க கூடியது போதுமான சுதாரிப்பு;

குடிப்பழக்கத்திற்கும் புகை பிடிப்பதற்கும் தடை விதிக்க சட்டம்
கொண்டு வரக்கோரி மனுக்கள் அனுப்பினால் நிராகரிப்பு;
பிள்ளைகளின் மனதை நோகடிக்காமல் நாட்டின் முதுகெலும்பாக
மாற்றும் வகையில் ஆசிரியர்கள் கண்டிப்பு;

உள்ளுக்குள் ஒளிந்திருக்கும் திறமையை வெளிப்படுத்தி விட்டால்
யாவர்க்கும் தங்கபதக்கம் வாங்கிய நினைப்பு;
நீர்மட்டம் அதிகரிப்பதோடு தண்ணீர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி
வைக்கும் விடை - மாபெறும் அணைகளின்திறப்பு;

காதல் வலையில் மாட்டிக்கொண்டு காதலர்கள் ஓடி விட்டால்
அவர்களை பெற்றோருக்கு இரத்தக்கொதிப்பு;
அங்கீகாரம் மற்றும் போதுமான இட வசதிகள் பெறாத கல்லூரிகள்
முன்பு மாணவர்கள் கொந்தளிப்பு;

தொடரும் ...

வியாழன், 7 ஜூன், 2012

மெகா கவிதை 25 - நாட்டு நடப்பு (பாகம் 7)

உற்சாகத்துடன் பார்க்க தோன்றும் கிரிக்கெட் வீரர்களின்
அதிரடி ரன் குவிப்பு;
சிரத்தையுடன் விடாமுயற்சி செய்தால் எந்தத்துறையிலும்
உயர் பதவி நீடிப்பு;
நாள் தோறும் போட்டி போட்டுக்கொண்டு சூடான செய்திகளை
தரும் பல பத்திரிக்கை பதிப்பு;
தோல்வியை கண்டு அஞ்சாமல் வெற்றியை உருவாக்கும்
வழிகளில் சிந்தனையை திருப்பு;
பறவை காய்ச்சல் போன்ற நோய்கள் வராமலிருக்க
கிருமி நாசனி மருந்துகள் தெளிப்பு;
வேகமாக வளர்ந்து வரும் கணினி யுகத்தில் சாதனை
படைக்க விரும்புவது இளைஞனின் எதிர்பார்ப்பு;
அஸ்திவாரம் ஆணித்தரமாக கட்டினாலும் நிலநடுக்கம்
வந்தால் காணாமல் போய் விடும் குடியிருப்பு;
காதலன் ஏமாற்றி விட்டால் நடிகைகள் தற்கொலை செய்து
கொள்வது நிஜ வாழ்க்கையோடு ஏற்பட்ட சலிப்பு;
சிந்திக்க கூடிய தத்துவங்களை சிரிப்புடன் கலந்து தருவது
நல்ல சினிமா ஏற்படுத்தும் பிரமிப்பு;
ஏய்ட்ஸ் போன்ற குணமடையாத வியாதிகள் வராமலிருக்க
மக்களுக்கு தேவைப்படும் உணர்வு விழிப்பு;
சாப்பிடும் உணவிலிருந்து கட்டின வீடு வரைக்கும் பயனுள்ள
பொருட்களுக்கு வேண்டும் பராமரிப்பு;
வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியோடு தென் பட்டால் அதற்க்கு காரணம்
பெட்ரோல் - டீஸல் விலை குறைப்பு;

தொடரும் ...

திங்கள், 4 ஜூன், 2012

மெகா கவிதை 25 - நாட்டு நடப்பு (பாகம் 6)


குடும்பத்தில் சந்தேகத்தால் சிறு சண்டை வந்தாலும்
அக்கம் - பக்கம் முனுமுனுப்பு;
மழை நீர் மட்டுமல்ல எதிர்கால திட்டங்களுக்கும் உடனடி
தேவை தான் சேமிப்பு;
சுனாமி மட்டுமல்ல மற்றவர்கள் மனதை புண்படுத்துவதும்
தான் மிகப்பெரிய பாதிப்பு;
ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கு கூட கராத்தே
போன்ற வித்தைகள் தருவது தற்காப்பு;
நேரத்தை வீணாய்ச் செலவழிக்க மனிதன் கண்டு பிடித்த
யுக்தி தான் ஒத்திவைப்பு;
கறுப்பு பணம் சேகரிக்கும் தொழில் அதிபர்களை விட்டு
வைக்காது சட்டத்தின் வரி விதிப்பு;
மேடைகளில் துணிவோடு பேச வேண்டும் என்றால்
தவிர்க்க கூடியது படபடப்பு;
ஊனமுற்றோர் என்றால் ஒதுக்கி வைக்காமல் சமூகத்தில்
தர வேண்டும் ஊக்குவிப்பு;
இயற்க்கை சீற்றங்களை மற்றும் பெயர் தெரியாத வியாதிகளை
உயிர் பிரிந்த சடலங்கள் புதைப்பு;
தேசிய கீதம் பாடும் பொது ஒவ்வொரு குடிமகனுக்கும்
சல்யூட் அடிக்கச்செய்யும் சிலிர்ப்பு;
பாலைவனத்தில் நீர் வீழ்ச்சி கண்டால் உலகம் மறக்க
செய்யும் இயற்க்கை அரவணைப்பு;
அளவில்லாத ஆனந்தம் கிடைக்க மலைக்குன்றின்
உச்சிக்கு சென்று எதிரொலி எழுப்பு;


தொடரும் ...

வெள்ளி, 1 ஜூன், 2012

மெகா கவிதை 25 - நாட்டு நடப்பு (பாகம் 5)

 மலர்களாகவும் செல்வங்களாகவும் திகழும் மழலைகள்
செய்யும் ஆர்பாட்டம் தித்திப்பு;
காதலுக்கு மரியாதை செலுத்தி பிரியமுடன் வாழ்வதே
நல்ல ஜோடி அமைப்பு;
புகழ் ஏணியின் உச்சத்துக்கு போனாலும் மறக்க கூடாது
கடந்த கால வாழ்க்கை குறிப்பு;
கண்டுபிடிக்கப்பட்ட பல புது கருவிகள் மூலம் வேகமான
உலகில் அவசர செய்திகள் அறிவிப்பு;
வாழ்வில் ஏற்படும் திருப்பங்கள் மற்றும் நிகழ்வுகள்
யாவும் யூகிக்க முடியாத கணிப்பு;
சஞ்சலம் ஏற்பட்டாலும் கலங்காமல் கண்ணீரை துடைப்பது
பெற்றத்தாயின் கவனிப்பு;
ஆசைகளும் கனவுகளும் நிறைவேறி விட்டால் யாவருக்கும்
உலகின் அதிசயங்களை பார்க்கும் திகைப்பு;
கோபத்தை தூண்டுவதும் மற்றவர்களை இழிவு படுத்தி
பேசுவதற்கும் முதல் காரணம் இறுமாப்பு;
கணவன் மனைவி உறவு பிரிவில்லாமல் இருப்பதற்கு
தேவை வலுவான பிணைப்பு;
உறவுகளின் பந்தம் நேசத்தோடு உரு துணையாக இருக்க
உதவுவது பாசத்தின் இணைப்பு;
பக்தி பரவசத்துடன் இறைவனை வணங்கச்செய்வது
கோவில் மணி அழைப்பு;
விடுமுறை கொண்டாட்டம் என்றால் குடும்பமே
உல்லாச பயணத்தில் களிப்பு;

தொடரும்...

வியாழன், 31 மே, 2012

மெகா கவிதை 25 - நாட்டு நடப்பு (பாகம் 4)

சமுதாயத்தின் நிலைமையை எப்பொழுதும் உணர்த்த
மாணவர்களுக்கு வேண்டும் தனி வகுப்பு;
அவதாரங்கள் பல ஆண்டவன் எடுத்தாலும் குறையாது
மனிதன் செய்யும் தவறுகளின் தொகுப்பு;
சொந்த உயிரைக்கூட பொருட்படுத்தாமல் தேசத்தை
காப்பாற்றும் ராணுவ வீரன் தருவது பாதுகாப்பு;
விலை உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் மக்கள் ஆசைப்பட்டு
வாங்கும் தங்கம் பளபளப்பு;
அன்னையின் முழு அன்பு கிடைத்தால் மட்டுமே சீராகும்
பிள்ளைகளின் வளர்ப்பு;
மகிழ்ச்சியுடன் கூடிய பேரானந்த துளிகள் கொண்டு
வாழ்க்கை பாத்திரத்தை நிரப்பு;
தீவிரவாதிகளை கண்டுபிடிப்பபதில் போலீஸ் முதல் சிபிஐ
அதிகாரிகள் வரை காட்டும் பரபரப்பு;
அவரவர் கடமையை ஒழுங்காக செய்தால் கொடிகட்டி
பறக்கும் நாட்டின் தலைப்பு;
கல்வியின் தீப ஒளியை ஏற்ற ஆண் பெண் இருவருக்கும்
சமமாக தேவை படிப்பு;
நட்பின் பாலம் இடிந்து விழாமல் இருக்க நண்பர்களுக்கு
வேண்டும் இறுக்கமான பிடிப்பு;
புடவைகள் பல தினுசுகளாக வந்தாலும் அழகு தருவது
மடிசார் மாமி மடிப்பு;
விருதுகள் பல கொடுத்தாலும் மக்கள் மனதில் நீங்காது
இடம் பிடிப்பதே பிரம்மாதமான நடிப்பு;

தொடரும்...

வியாழன், 24 மே, 2012

மெகா கவிதை 25 - நாட்டு நடப்பு (பாகம் 3)

ஒருவன் தனது வேலைகளை உடனடியாக செய்ய
உதவுவது உடலின் ஒவ்வொரு உறுப்பு;
வாக்குரிமை என்ற கடமை நாட்டின் எல்லா குடிமகனின்
மாபெரும் பொறுப்பு;
ஐந்தறிவு படைத்த நன்றியுள்ள மிருகங்களிடம் காட்ட
வேண்டாம் வெறுப்பு;
தேடி வந்து நல்ல நட்பு கிடைக்கும் போது சொல்ல
வேண்டாம் மறுப்பு;
தவமாய் தவமிருந்து கிடைத்த பலனிர்க்கு கடவுள்
கொடுத்த வரம் தான் பிறப்பு;
எப்படிப்பட்ட மனிதர்களாக இருந்தாலும் தடுக்க
முடியாத விஷயம் இறப்பு;
பாபம் தெரிந்தே செய்த பாவிகளுக்கு நரகத்தில் கூட
இல்லை மன்னிப்பு;
ஆபத்துகளில் சறுக்காமல் இருக்க தேவை தன்னம்பிக்கை
எனும் துடுப்பு;
நாட்டின் முன்னேற்ற பாதைக்கு இளைஞர்களுக்கு தேவை
வெறியுடன் கூடிய நெருப்பு;
பிரச்னை என்பது ஒவ்வொரு மனிதனுக்கு கிடைத்த
தங்கமான வாய்ப்பு;
அடிமை நாடு சுதந்திரம் வாங்கி வல்லரசாக மாறினால்
புருவம் உயரும் வியப்பு;
தொடரும் ...

திங்கள், 21 மே, 2012

மெகா கவிதை 25 - நாட்டு நடப்பு (பாகம் 2)


நாட்டின் சுதந்திரத்திற்க்கு பாடுபட்ட தியாகிகள் மடிந்தது
மிக பெரிய இழப்பு;
பேராசை உள்ள மனிதர்கள் லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும்
அதிகரித்து விட்ட கொழுப்பு;
தீவிரவாதம் இல்லாத நாடு கிடைக்க முதல் தேவை
வன்முறையின் அழிப்பு;
அகந்தை உள்ள மனிதர்கள் தானம் கொடுக்கும் பொழுது
கூடாது பழிப்பு;
விவசாயிகள் சிந்தும் வியர்வை துளியால் தன தானியம்
யாவும் செழிப்பு;
மாநிலத்தின் முதல் மாணவனாக பரீட்சையில் தேர்ச்சி
பெற்றால் பெற்றோர்களுக்கு பூரிப்பு;
குதூகலமாக நூறு வயது வரை வாழ வைக்கும்
மத்தாப்பு தான் சிரிப்பு;
ஒவ்வொரு மொழிகள் பேசும் போது வார்த்தைகளுக்கு தேவை
சரியான உச்சரிப்பு;
பணம் மட்டுமில்லாமல் நல்ல மனமும் இருந்தால் தான்
சமூகத்தில் மதிப்பு;
ஒழுக்கம் கற்றுக்கொள்ள தேவையானது சிகரம் தொட்ட
மனிதர்களின் சந்திப்பு;
எத்தனை நிறங்கள் வந்தாலும் மாறாமல் இருப்பது
வறுமையின் நிறம் சிவப்பு;
பத்து மாதம் சுமந்து பெற்ற அன்னையின்
கருவறை நிறம் கறுப்பு;
தொடரும்....

ஞாயிறு, 20 மே, 2012

மெகா கவிதை 25 - நாட்டு நடப்பு (பாகம் 1)

 உலகில் வாழும் உயிரினங்கள் யாவும் இறைவனின் படைப்பு;
சுறுசுறுப்புடன் வாழ்வில் வெற்றி பெற வேண்டும் உழைப்பு;
சவால் போட்டிகளில் ஜெயம் கிடைக்க தேவை துடிப்பு;
கிராமங்களில் இப்பொழுதும் மாறாமல் இருப்பது மண்வாசனையுடன் அடுப்பு;
நகரங்களில் எப்பொழுதும் மாறிக்கொண்டே இருக்கும் நாகரீக உடுப்பு;
அரசியல் தலைவர்களின் செல்வாக்கை பிரபலமாக்க அவர்களுக்கு எடுப்பு;
இன்பம் வரும் நேரத்தில் சந்தோஷத்தை வெளிபடுத்த கொடுப்பது இனிப்பு;
துன்பம் வரும் நேரத்தில் துக்கத்தை காட்டிக்கொள்ளாமல் உள்ளுக்குள் கசப்பு;
பணக்காரர்கள் தங்களது பிறந்த நாளை கூட கொண்டாடும் முறை சிறப்பு;
ஏழைகள் தங்களது வாழ் நாள் முழுவதும் கஷ்டப்பட்டு போராடுவதில் தவிப்பு;
உண்மை குற்றவாளிகளை விடுவித்து நிரபராதிகளை தண்டிப்பது தவறான தீர்ப்பு;
மதங்களும் ஜாதிகளும் இல்லாமல் இருக்க செய்யும் சக்தி ஒற்றுமை ஈர்ப்பு;
நோய்களை மட்டுமல்லாமல் எதிரிகளையும் விரட்ட வைக்கும் சக்தி எதிர்ப்பு;

தொடரும் ...

ஞாயிறு, 13 மே, 2012

கவிதை 24 -கல்லூரித்தோழன்

சிறு வேலையை கூட சுறுசுறுப்பாகவும் பரபரப்பாகவும்
செய்து முடிக்கும் நாணயமுள்ள நண்பனே;
உன் நகைச்சுவை சரவெடிகள் யாவும் யாவரையும்
சிரிக்க மட்டுமல்ல சிந்திக்க வைத்தன;
உன் திறமையான செயல்கள் எங்கேயும் எப்போதும்
சந்தோஷப்பட மட்டுமல்ல ஆச்சரியப்பட வைத்தன;

உன் உதவும் குணத்திற்கு பாராட்டு பதக்கம் கொடுக்கட்டுமா ?
உன் வேடிக்கை பேச்சுக்கு புலமை புகழாரம் சூடட்டுமா ?
முன் யோசனை தரும் உன் புத்திக்கு வெற்றிமாலை அணியட்டுமா ?

சோதனைகளை சாதனைகளாக மாற்றி நம் நட்புக்கு
முதல் மரியாதை கொடுக்கும் தோழா,
உன் தன்னம்பிக்கை உன் வாழ்வுக்கு மட்டுமல்ல
பிறர் வாழ்வுக்கும் கை கொடுக்கும் ...
உன் லட்சிய பயணத்தில் எப்பொழுதும்
சிரிப்பு என்ற பூ தளராமல் பூக்கட்டும் ....
நட்பு என்ற பூ மறவாமல் மலரட்டும் ...

நம் கல்லூரி நினைவுகள் உன்னை தாலாட்டும் போது
முதன் முதலில் ஞாபகம் வருவது நம் நட்பாக இருக்கட்டும் ...!

நட்பு வரமா தவமா?
சிவசுப்பிரமணியன்