வெள்ளி, 1 ஜூன், 2012

மெகா கவிதை 25 - நாட்டு நடப்பு (பாகம் 5)

 மலர்களாகவும் செல்வங்களாகவும் திகழும் மழலைகள்
செய்யும் ஆர்பாட்டம் தித்திப்பு;
காதலுக்கு மரியாதை செலுத்தி பிரியமுடன் வாழ்வதே
நல்ல ஜோடி அமைப்பு;
புகழ் ஏணியின் உச்சத்துக்கு போனாலும் மறக்க கூடாது
கடந்த கால வாழ்க்கை குறிப்பு;
கண்டுபிடிக்கப்பட்ட பல புது கருவிகள் மூலம் வேகமான
உலகில் அவசர செய்திகள் அறிவிப்பு;
வாழ்வில் ஏற்படும் திருப்பங்கள் மற்றும் நிகழ்வுகள்
யாவும் யூகிக்க முடியாத கணிப்பு;
சஞ்சலம் ஏற்பட்டாலும் கலங்காமல் கண்ணீரை துடைப்பது
பெற்றத்தாயின் கவனிப்பு;
ஆசைகளும் கனவுகளும் நிறைவேறி விட்டால் யாவருக்கும்
உலகின் அதிசயங்களை பார்க்கும் திகைப்பு;
கோபத்தை தூண்டுவதும் மற்றவர்களை இழிவு படுத்தி
பேசுவதற்கும் முதல் காரணம் இறுமாப்பு;
கணவன் மனைவி உறவு பிரிவில்லாமல் இருப்பதற்கு
தேவை வலுவான பிணைப்பு;
உறவுகளின் பந்தம் நேசத்தோடு உரு துணையாக இருக்க
உதவுவது பாசத்தின் இணைப்பு;
பக்தி பரவசத்துடன் இறைவனை வணங்கச்செய்வது
கோவில் மணி அழைப்பு;
விடுமுறை கொண்டாட்டம் என்றால் குடும்பமே
உல்லாச பயணத்தில் களிப்பு;

தொடரும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக