சனி, 23 ஜூன், 2012

கவிதை 26 - இயற்க்கை காதல்

ஆழமான கடலில் நான் கண்டெடுத்த முத்து நீ,
அழகான தோட்டத்தில் நான் தேடிவந்த மலர் நீ,
நீளவான நதியில் நான் ரசித்த நிலவும் நீ,

அற்புதமான கற்களில் நான் செதுக்கி வைத்த சிலை நீ,
சுத்தமான முட்களில் நான் பதுக்கி வைத்த மொட்டு நீ,
உயரமான மாமரங்களில் நான் எட்டி பிடித்த மாங்கனியும் நீ,

இயற்கையின் மொழிதனை புரிய வைத்த நீ யாரோ?
புரியாத புதிராக ஏங்கி தவிக்கும் நான் யாரோ?

நான் எங்கு தேடியும் உன்னை காணவில்லையே,
நீ என்னுள் இருப்பதை இன்னும் உணரவில்லையே,
நான் உன்னை பார்த்தாலே கடந்தகாலம் ஞாபகமில்லையே,

நீ என்னுடன் பேசினாலே வருங்காலம் தெரிவதில்லையே,
நான் உனக்காக சேர்த்து வைத்தேன் முத்துமாலையே,
நீ ஆனால் விரும்பியதோ அந்த வானவில்லையே,

நான் உன்னை வர்ணிக்க வார்த்தைகள் வரவில்லையே,
நீ என்னை விட்டு போக மனம் இடம் தரவில்லையே,
இல்லாத ஒன்றினை கற்பனை செய்ய சொன்னது நீ தானோ?
ஏதோ இருக்கும் என நம்பி ஏமாற்றம் அடைந்தது நான் தானோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக