திங்கள், 4 ஜூன், 2012

மெகா கவிதை 25 - நாட்டு நடப்பு (பாகம் 6)


குடும்பத்தில் சந்தேகத்தால் சிறு சண்டை வந்தாலும்
அக்கம் - பக்கம் முனுமுனுப்பு;
மழை நீர் மட்டுமல்ல எதிர்கால திட்டங்களுக்கும் உடனடி
தேவை தான் சேமிப்பு;
சுனாமி மட்டுமல்ல மற்றவர்கள் மனதை புண்படுத்துவதும்
தான் மிகப்பெரிய பாதிப்பு;
ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கு கூட கராத்தே
போன்ற வித்தைகள் தருவது தற்காப்பு;
நேரத்தை வீணாய்ச் செலவழிக்க மனிதன் கண்டு பிடித்த
யுக்தி தான் ஒத்திவைப்பு;
கறுப்பு பணம் சேகரிக்கும் தொழில் அதிபர்களை விட்டு
வைக்காது சட்டத்தின் வரி விதிப்பு;
மேடைகளில் துணிவோடு பேச வேண்டும் என்றால்
தவிர்க்க கூடியது படபடப்பு;
ஊனமுற்றோர் என்றால் ஒதுக்கி வைக்காமல் சமூகத்தில்
தர வேண்டும் ஊக்குவிப்பு;
இயற்க்கை சீற்றங்களை மற்றும் பெயர் தெரியாத வியாதிகளை
உயிர் பிரிந்த சடலங்கள் புதைப்பு;
தேசிய கீதம் பாடும் பொது ஒவ்வொரு குடிமகனுக்கும்
சல்யூட் அடிக்கச்செய்யும் சிலிர்ப்பு;
பாலைவனத்தில் நீர் வீழ்ச்சி கண்டால் உலகம் மறக்க
செய்யும் இயற்க்கை அரவணைப்பு;
அளவில்லாத ஆனந்தம் கிடைக்க மலைக்குன்றின்
உச்சிக்கு சென்று எதிரொலி எழுப்பு;


தொடரும் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக