ஞாயிறு, 24 ஜூன், 2012

கவிதை 27 - சாதனை படிகள்


அமைதியின் இருப்பிடத்தை தேடி செல்வோம்,
நாம் போகும் பாதையில் முட்கள் மலரச்சேய்வோம் !!!

வெற்றியின் சிகரத்தை நோக்கி போவோம்,
நாம் சந்திக்கும் துன்பங்களை இன்பங்களாக கருதுவோம் !!!

மகிழ்ச்சியின் எல்லையை எட்டி பிடிப்போம்,
நாம் எதிர்காலத்தின் முடிவுகளை சிந்திப்போம் !!!

நட்பின் ஆழத்தை என்றும் நிலை நாட்டுவோம்,
நாம் நமது இலட்சிய குறிக்கோள்களை தீர்மானிப்போம் !!!

நேர்மையின் வழியில் என்றும் செயல் படுவோம்,
நாம் வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்வோம் !!!

அறிவின் ஆற்றலை அச்சமின்றி துணிவுடன் வளர்ப்போம்,
நாம் மண்ணுக்கு முதல் மரியாதை செலுத்துவோம் !!!

பாசத்தின் பூக்களை பண்புடனும் பணிவுடன் சேகரிப்போம்,
நாம் ஒற்றுமையுடன் என்றும் கூடி வாழ்வோம் !!!

அன்பின் மழை பொழிய பிரார்த்தனை செய்வோம்,
நாம் நம் தாய் நாட்டுக்கு தலை வணங்குவோம் !!!

மனத்தூய்மை கொண்டு பிரபஞ்சத்தை சுத்தம் செய்வோம்,
நாம் நமக்கு வஞ்சனை செய்யும் நஞ்சு நிறைந்த,
நெஞ்சங்களை அமிர்தத்தை கொடுத்து நல் உள்ளங்களாக,
மாற்றி புது வரலாறு படைப்போம் !!!

-சிவசுப்பிரமணியன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக