வியாழன், 28 ஜூன், 2012

கவிதை 29 - காதல் என்பது ???

காதல் என்பது - காத்திருக்கும் மோதல் :)
காதல் என்பது - காலத்தின் தூண்டுதல் :)
காதல் என்பது - காயமடைந்த மனதிற்க்கு ஆறுதல் :)


நிலவின் ஒளியை பகிர்ந்து கொள்ள தோன்றும்
அன்பு தான் காதல் ...
உலகத்தை தன் காலடியில் சரண் அடைய செய்யும்
பண்பு தான் காதல் ...
கனவுகளும் ஆசைகளும் நிறைந்த அதிசயமான
ஊர்வலம் தான் காதல் ...
இரு கண்கள் சந்திக்கும் போது உள்ளத்தில்
உருவாகும் ஏக்கம் தான் காதல் ... 
இரு கைகளைக்கொண்டு தீபச்சுடரை காக்கும்
உணர்வு தான் காதல் ...
துன்பத்தை இன்பமாக்க உதவும் பொறுமையின்
சிகரம் தான் காதல் ...
சோகத்தை சந்தோஷமாக்க உதவும் புன்னகையின்
கோபுரம் தான் காதல் ...
என்றென்றும் காலத்தால் அழிக்க முடியாத
சரித்திரமாகவும் காவியமாகவும் தொடரட்டும் இந்த காதல் *****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக