வெள்ளி, 8 ஜூன், 2012

மெகா கவிதை 25 - நாட்டு நடப்பு (பாகம் 8)


உலகின் அமைதியை எப்பொழுதும் சீர்குலைக்கும் வகையில்
ஆங்காங்கே தொடர் குண்டு வெடிப்பு;
தஞ்சம் என்று நம்பி வரும் அகதிகளுக்கு அடைக்கலத்துடன்
கொடுக்க கூடியது போதுமான சுதாரிப்பு;

குடிப்பழக்கத்திற்கும் புகை பிடிப்பதற்கும் தடை விதிக்க சட்டம்
கொண்டு வரக்கோரி மனுக்கள் அனுப்பினால் நிராகரிப்பு;
பிள்ளைகளின் மனதை நோகடிக்காமல் நாட்டின் முதுகெலும்பாக
மாற்றும் வகையில் ஆசிரியர்கள் கண்டிப்பு;

உள்ளுக்குள் ஒளிந்திருக்கும் திறமையை வெளிப்படுத்தி விட்டால்
யாவர்க்கும் தங்கபதக்கம் வாங்கிய நினைப்பு;
நீர்மட்டம் அதிகரிப்பதோடு தண்ணீர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி
வைக்கும் விடை - மாபெறும் அணைகளின்திறப்பு;

காதல் வலையில் மாட்டிக்கொண்டு காதலர்கள் ஓடி விட்டால்
அவர்களை பெற்றோருக்கு இரத்தக்கொதிப்பு;
அங்கீகாரம் மற்றும் போதுமான இட வசதிகள் பெறாத கல்லூரிகள்
முன்பு மாணவர்கள் கொந்தளிப்பு;

தொடரும் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக