சனி, 9 ஜூன், 2012

மெகா கவிதை 25 - நாட்டு நடப்பு (கடைசி பாகம் 9)


உலகின் ஏதோ மூலையில் நடைபெறும் கால்பந்து,கிரிகெட் போட்டிகளை
கண்டு களிக்க தொலைக்காட்சி மூலம் நேரடி ஒளிபரப்பு;
வெகுமதி பெறுவதற்கு அரசு ஊழியர்கள் நடத்தும் வேலை
நிறுத்தத்தால் எங்கும் கடை அடைப்பு;

நவீன தொழில் நுட்பத்திற்கு கிடைத்த ஞாபக சின்னம் தான்
சின்னஞ்சிறு அலைபேசி கண்டுபிடிப்பு;
சாலை விதிமுறைகளை மற்றும் சட்ட ஒழுங்கை கடைபிடிக்க
மக்களுக்கு ஏன் இவ்வளவு களைப்பு;

ஆன்மீக சிந்தனையில் பக்தி மார்க்கம் தேடி நடக்கும் சந்நியாசிகள்
சொந்த-பந்த,சுக-போகங்களை அர்பணிப்பு;
தவழும் குழந்தைகளுக்கு மற்றும் தள்ளாடும் முதியோர்களுக்கு
தர வேண்டும் அலட்சியமில்லாத கண்காணிப்பு;
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளம் எனப்படுவது
தரம் வாய்ந்த நாணயமுள்ள பொருட்களின் தயாரிப்பு;

(1௦௦ வது வரி) - அட்டவணை போட்டு வைத்தாலும் நிர்ணயிக்கமுடியாத
சுற்றுப்புற சூழல் நிகழ்வுகளை, ஒவ்வொரு வினாடியில் தோன்றும்
முடிவுகள் இல்லாத மாபெரும் மாற்றங்களை மற்றும் மக்கள்
எதிர்பார்க்காமல் ஏற்ப்படும் எல்லைகள் இல்லாத திடுக்கிடும்
சம்பவங்களை தண்டோரா போட்டு சொல்லும்
தொடர் வண்டி தான் இந்த நாட்டு நடப்பு !!!!!!!!!!!!!!!

மெகா கவிதை நாட்டு நடப்பு - முற்றும் :)

மீண்டும் என்னோட ஐம்பதாவது கவிதை மாபெரும்
நட்சத்திர தொடர் கவிதையாக உலா வரும்,
அது வரை உங்களிடம் இருந்து விடைபெறுவது,
சிவசுப்பிரமணியன் **

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக