வியாழன், 7 ஜூன், 2012

மெகா கவிதை 25 - நாட்டு நடப்பு (பாகம் 7)

உற்சாகத்துடன் பார்க்க தோன்றும் கிரிக்கெட் வீரர்களின்
அதிரடி ரன் குவிப்பு;
சிரத்தையுடன் விடாமுயற்சி செய்தால் எந்தத்துறையிலும்
உயர் பதவி நீடிப்பு;
நாள் தோறும் போட்டி போட்டுக்கொண்டு சூடான செய்திகளை
தரும் பல பத்திரிக்கை பதிப்பு;
தோல்வியை கண்டு அஞ்சாமல் வெற்றியை உருவாக்கும்
வழிகளில் சிந்தனையை திருப்பு;
பறவை காய்ச்சல் போன்ற நோய்கள் வராமலிருக்க
கிருமி நாசனி மருந்துகள் தெளிப்பு;
வேகமாக வளர்ந்து வரும் கணினி யுகத்தில் சாதனை
படைக்க விரும்புவது இளைஞனின் எதிர்பார்ப்பு;
அஸ்திவாரம் ஆணித்தரமாக கட்டினாலும் நிலநடுக்கம்
வந்தால் காணாமல் போய் விடும் குடியிருப்பு;
காதலன் ஏமாற்றி விட்டால் நடிகைகள் தற்கொலை செய்து
கொள்வது நிஜ வாழ்க்கையோடு ஏற்பட்ட சலிப்பு;
சிந்திக்க கூடிய தத்துவங்களை சிரிப்புடன் கலந்து தருவது
நல்ல சினிமா ஏற்படுத்தும் பிரமிப்பு;
ஏய்ட்ஸ் போன்ற குணமடையாத வியாதிகள் வராமலிருக்க
மக்களுக்கு தேவைப்படும் உணர்வு விழிப்பு;
சாப்பிடும் உணவிலிருந்து கட்டின வீடு வரைக்கும் பயனுள்ள
பொருட்களுக்கு வேண்டும் பராமரிப்பு;
வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியோடு தென் பட்டால் அதற்க்கு காரணம்
பெட்ரோல் - டீஸல் விலை குறைப்பு;

தொடரும் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக