வியாழன், 31 மே, 2012

மெகா கவிதை 25 - நாட்டு நடப்பு (பாகம் 4)

சமுதாயத்தின் நிலைமையை எப்பொழுதும் உணர்த்த
மாணவர்களுக்கு வேண்டும் தனி வகுப்பு;
அவதாரங்கள் பல ஆண்டவன் எடுத்தாலும் குறையாது
மனிதன் செய்யும் தவறுகளின் தொகுப்பு;
சொந்த உயிரைக்கூட பொருட்படுத்தாமல் தேசத்தை
காப்பாற்றும் ராணுவ வீரன் தருவது பாதுகாப்பு;
விலை உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் மக்கள் ஆசைப்பட்டு
வாங்கும் தங்கம் பளபளப்பு;
அன்னையின் முழு அன்பு கிடைத்தால் மட்டுமே சீராகும்
பிள்ளைகளின் வளர்ப்பு;
மகிழ்ச்சியுடன் கூடிய பேரானந்த துளிகள் கொண்டு
வாழ்க்கை பாத்திரத்தை நிரப்பு;
தீவிரவாதிகளை கண்டுபிடிப்பபதில் போலீஸ் முதல் சிபிஐ
அதிகாரிகள் வரை காட்டும் பரபரப்பு;
அவரவர் கடமையை ஒழுங்காக செய்தால் கொடிகட்டி
பறக்கும் நாட்டின் தலைப்பு;
கல்வியின் தீப ஒளியை ஏற்ற ஆண் பெண் இருவருக்கும்
சமமாக தேவை படிப்பு;
நட்பின் பாலம் இடிந்து விழாமல் இருக்க நண்பர்களுக்கு
வேண்டும் இறுக்கமான பிடிப்பு;
புடவைகள் பல தினுசுகளாக வந்தாலும் அழகு தருவது
மடிசார் மாமி மடிப்பு;
விருதுகள் பல கொடுத்தாலும் மக்கள் மனதில் நீங்காது
இடம் பிடிப்பதே பிரம்மாதமான நடிப்பு;

தொடரும்...

1 கருத்து:

  1. ஐம்பது வரிகளை நெருங்கி விட்டது தொடர் கவிதை நாட்டு நடப்பு ...

    பதிலளிநீக்கு