திங்கள், 21 மே, 2012

மெகா கவிதை 25 - நாட்டு நடப்பு (பாகம் 2)


நாட்டின் சுதந்திரத்திற்க்கு பாடுபட்ட தியாகிகள் மடிந்தது
மிக பெரிய இழப்பு;
பேராசை உள்ள மனிதர்கள் லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும்
அதிகரித்து விட்ட கொழுப்பு;
தீவிரவாதம் இல்லாத நாடு கிடைக்க முதல் தேவை
வன்முறையின் அழிப்பு;
அகந்தை உள்ள மனிதர்கள் தானம் கொடுக்கும் பொழுது
கூடாது பழிப்பு;
விவசாயிகள் சிந்தும் வியர்வை துளியால் தன தானியம்
யாவும் செழிப்பு;
மாநிலத்தின் முதல் மாணவனாக பரீட்சையில் தேர்ச்சி
பெற்றால் பெற்றோர்களுக்கு பூரிப்பு;
குதூகலமாக நூறு வயது வரை வாழ வைக்கும்
மத்தாப்பு தான் சிரிப்பு;
ஒவ்வொரு மொழிகள் பேசும் போது வார்த்தைகளுக்கு தேவை
சரியான உச்சரிப்பு;
பணம் மட்டுமில்லாமல் நல்ல மனமும் இருந்தால் தான்
சமூகத்தில் மதிப்பு;
ஒழுக்கம் கற்றுக்கொள்ள தேவையானது சிகரம் தொட்ட
மனிதர்களின் சந்திப்பு;
எத்தனை நிறங்கள் வந்தாலும் மாறாமல் இருப்பது
வறுமையின் நிறம் சிவப்பு;
பத்து மாதம் சுமந்து பெற்ற அன்னையின்
கருவறை நிறம் கறுப்பு;
தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக