வியாழன், 24 மே, 2012

மெகா கவிதை 25 - நாட்டு நடப்பு (பாகம் 3)

ஒருவன் தனது வேலைகளை உடனடியாக செய்ய
உதவுவது உடலின் ஒவ்வொரு உறுப்பு;
வாக்குரிமை என்ற கடமை நாட்டின் எல்லா குடிமகனின்
மாபெரும் பொறுப்பு;
ஐந்தறிவு படைத்த நன்றியுள்ள மிருகங்களிடம் காட்ட
வேண்டாம் வெறுப்பு;
தேடி வந்து நல்ல நட்பு கிடைக்கும் போது சொல்ல
வேண்டாம் மறுப்பு;
தவமாய் தவமிருந்து கிடைத்த பலனிர்க்கு கடவுள்
கொடுத்த வரம் தான் பிறப்பு;
எப்படிப்பட்ட மனிதர்களாக இருந்தாலும் தடுக்க
முடியாத விஷயம் இறப்பு;
பாபம் தெரிந்தே செய்த பாவிகளுக்கு நரகத்தில் கூட
இல்லை மன்னிப்பு;
ஆபத்துகளில் சறுக்காமல் இருக்க தேவை தன்னம்பிக்கை
எனும் துடுப்பு;
நாட்டின் முன்னேற்ற பாதைக்கு இளைஞர்களுக்கு தேவை
வெறியுடன் கூடிய நெருப்பு;
பிரச்னை என்பது ஒவ்வொரு மனிதனுக்கு கிடைத்த
தங்கமான வாய்ப்பு;
அடிமை நாடு சுதந்திரம் வாங்கி வல்லரசாக மாறினால்
புருவம் உயரும் வியப்பு;
தொடரும் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக