சனி, 12 மே, 2012

கவிதை 23 - காவியக்காதல்


தாமரையை கையில் ஏந்தி , கண்ணீரை விழிகளில் சிந்தி,
காதலனுக்காக காத்திருந்தாள் அபூர்வ அழகி !
அம்புகளை வில்லால் ஏவி, எதிரிகள் கண்ணில் மண்ணை தூவி,
போர்க்களத்தில் வீரனாக திகழ்ந்தான் இளவரசனான காதலன் !
சூரியன் மறைந்து விடும் இன்னும் சில நிமிடங்களில் ....
தோல்வியைத்தழுவினர் எதிரிகள் நொடிகளில் ....
வெற்றியின் உச்சியை தொட்டு விட்டு,
காதலன் சிட்டாக பறந்தான் குதிரையில்;
பின்தொடர்ந்த எதிரி நாட்டு ஒற்றன் ஒருவன்,
குறிபார்த்தடித்தான் காதலன் முதுகில்;
முறைப்பெண்கள் பலர் இருக்க, காதலியை மட்டும் மணப்பதற்கு,
போர் தொடுக்க,வென்ற பின்னும் காதலனுக்கு
இந்த அகோர கதி ஏற்ப்பட்டதோ ....
அல்லது காதலர்களை பிரிக்க வில்லன்கள் பலர்
தீட்டிய சதி திட்டத்தால் காதலுக்குத்தான் களங்கம் நேரிட்டதோ ....
மலர் மாலையுடன் வருவான் என்று எதிர்பார்த்த காதலி
அதிர்ச்சியுடன் சிலையானாள் - இரத்த வெள்ளத்தில்
காதலனை கண்டபோது ......!
ஆனால் மங்கல வாத்தியம் முழங்கியது அகிலமெங்கும்
இரு ஆன்மாக்கள் ஒரு சேர கலந்து,
தெய்வீகக்காதலை மேம்படுத்தி,
புனிதக்காதலை சீராட்டி,
அமரக்காதலை நிலை நிறுத்தி,
சொர்க்கத்தை நோக்கி பயணம் தொடரும் போது .....!

வணக்கம்,
சிவசுப்பிரமணியன் ***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக