சனி, 12 மே, 2012

கவிதை 22 - கலியுக கிருஷ்ணா

புல்லாங்குழல் பிடித்து மூச்சுக்காற்றை ஸ்வரமாக வாசித்து
கோபியர் மனதை திருடும் ஆனந்தக்கண்ணா ***
வெண்ணைக்கு பதில் மண்ணைத்தின்று பூலோகத்தையே
தன் திருவாயில் மலரச்செய்த கோகுலக்கண்ணா ***
ஆலகால விஷம் நிறைந்த ஆதிசேஷனை தலையணையாக
கொண்டு ஆரவாரம் செய்யும் கோபாலக்கிருஷ்ணா ***
மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கு துணையாக இருந்து
அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்த அவதாரக்கிருஷ்ணா ***
பாலிய நண்பனான ஏழை குசெலனக்கு எழில் மாளிகை
அமைத்து கொடுத்த கொஞ்சும் ரமணா ***
ஆபத்திலிருந்து ஒரு கிராமத்தை காப்பாற்ற மாபெரும் அசுர மலையை
குடையாக தன் சுண்டு விரலில் தாங்கிப்பிடித்த பாலக்கிருஷ்ணா ***
எதிரிகளை துவம்சம் செய்ய தன் கையில் சுழலும்
சுதர்ஷன சக்கரத்தை ஏவிவிடும் ஹரிமுரளி ***
ரோகினி நட்சத்திரத்தில் பிறந்து அண்ணன் பலராமனோடு
சேர்ந்து வளர்ந்து தாய்மாமன் கம்சனை அழித்த மாயக்கண்ணா ***
லீலைகள் பல தொடர்ந்து செய்தாலும் உன் பெருமைகளை
சொல்ல ஆயிரம் கோடி நாவுகள் வேண்டும் ஸ்ரீ கிருஷ்ணா ***
மனக்கண்ணால் ஆராதனை செய்யும் பக்தர்களுக்கு அருள் புரியும்
கருணை கொண்ட கருமை நிறக்கண்ணா ***

கோபியர் கொஞ்சும் ரமணா ,
கோபால கிருஷ்ணா,
எப்போதெல்லாம் அதர்மம் தலை தூக்குகிறதோ அப்போதெல்லாம்
தர்மத்தை காக்கவும், தர்மத்தை நிலை நாட்டவும் வருவாய் கலியுக கிருஷ்ணா ******

ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா,
சிவசுப்பிரமணியன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக