ஞாயிறு, 13 மே, 2012

கவிதை 24 -கல்லூரித்தோழன்

சிறு வேலையை கூட சுறுசுறுப்பாகவும் பரபரப்பாகவும்
செய்து முடிக்கும் நாணயமுள்ள நண்பனே;
உன் நகைச்சுவை சரவெடிகள் யாவும் யாவரையும்
சிரிக்க மட்டுமல்ல சிந்திக்க வைத்தன;
உன் திறமையான செயல்கள் எங்கேயும் எப்போதும்
சந்தோஷப்பட மட்டுமல்ல ஆச்சரியப்பட வைத்தன;

உன் உதவும் குணத்திற்கு பாராட்டு பதக்கம் கொடுக்கட்டுமா ?
உன் வேடிக்கை பேச்சுக்கு புலமை புகழாரம் சூடட்டுமா ?
முன் யோசனை தரும் உன் புத்திக்கு வெற்றிமாலை அணியட்டுமா ?

சோதனைகளை சாதனைகளாக மாற்றி நம் நட்புக்கு
முதல் மரியாதை கொடுக்கும் தோழா,
உன் தன்னம்பிக்கை உன் வாழ்வுக்கு மட்டுமல்ல
பிறர் வாழ்வுக்கும் கை கொடுக்கும் ...
உன் லட்சிய பயணத்தில் எப்பொழுதும்
சிரிப்பு என்ற பூ தளராமல் பூக்கட்டும் ....
நட்பு என்ற பூ மறவாமல் மலரட்டும் ...

நம் கல்லூரி நினைவுகள் உன்னை தாலாட்டும் போது
முதன் முதலில் ஞாபகம் வருவது நம் நட்பாக இருக்கட்டும் ...!

நட்பு வரமா தவமா?
சிவசுப்பிரமணியன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக