சனி, 5 மே, 2012

கவிதை 21 - சினிமா தோழன்

தோழா, நீ ஒரு உயர்ந்த மனிதன் என்றேன்,
உருவத்தில் அல்ல ,உள்ளத்தில் ...
தோழா, நீ ஒரு பண்புள்ள காவல்காரன் என்றேன்,
வீட்டுக்கு அல்ல , நாட்டுக்கு ...
தோழா, நீ ஒரு கடுமையான உழைப்பாளி என்றேன்,
சொல்லில் அல்ல , செயலில் ...
தோழா, நீ ஒரு சகலகலா வல்லவன் என்றேன்,
நடிப்பில் அல்ல , நிஜத்தில் ...
தோழா, நீ ஒரு மாண்புமிகு மாணவன் என்றேன்,
பள்ளியில் அல்ல , சமூகத்தில் ...
தோழா, நீ ஒரு காதல் மன்னன் என்றேன்,
அரண்மனையில் அல்ல , இதயத்தில் ...
தோழா, நீ ஒரு தில்லான தூளான இளைஞன் என்றேன்,
கோபத்தில் அல்ல, வீரத்தில் ...
தோழா, நீ ஒரு இரக்கமுள்ள பேரழகன் என்றேன்,
தோற்றத்தில் அல்ல, குணத்தில் ...
தோழா, நீ ஒரு அன்புள்ள எதிரி என்றேன்,
நல்லவனக்கு அல்ல, கெட்டவனுக்கு ...
தோழா, நீ ஒரு ஜீன்ஸ் போட்ட நாயகன் என்றேன்,
சினிமாவுக்கு அல்ல, மக்களுக்கு ...
தோழா, நீ ஒரு சூர்யவம்ச தலைமகன் என்றேன்,
கம்பீரதுக்காக அல்ல, நட்புக்காக ..


நண்பா,நீ ஒரு ஆணையிடும் ஜென்டில் மேன் என்றேன்,
அகம்பாவமான அல்ல, அமைதியான ...
நண்பா,நீ ஒரு கலக்கும் மகாநடிகன் என்றேன்,
நாடகத்தில் அல்ல, வாழ்க்கையில் ...
நண்பா,நீ ஒரு சொக்கதங்க கேப்டன் என்றேன்,
கப்பலுக்கு அல்ல, ராஜ்ஜியத்துக்கு ...
நண்பா,நீ ஒரு டூயட் பாடும் ராஜகுமாரன் என்றேன்,
வம்சத்தில் அல்ல, குரலில் ...
நண்பா,நீ ஒரு லவ்லி - லக்கி - பிஸ்தா என்றேன்,
மிரட்டுவதில் அல்ல, நேசிப்பதில் ...
நண்பா,நீ ஒரு பாசமுள்ள காதலன் என்றேன்,
காதலிக்கு அல்ல, ஏழைகளுக்கு ...
நண்பா,நீ ஒரு அசத்தல் இம்சை அரசன் என்றேன்,
அடிவாங்குவதில் அல்ல, சிரிக்க வைப்பதில் ...
நண்பா,நீ ஒரு சொல்லி அடிக்கும் காமெடி கிங் என்றேன்,
நக்கல் நகைச்சுவைக்காக அல்ல, சிக்கல் சிந்தனைக்கு ...
நண்பா,நீ ஒரு மயக்கும் மன்மதன் என்றேன்,
ரதி தேவிக்கல்ல,ரசனை மனதிற்கு ...
நண்பா,நீ ஒரு பொல்லாத சுள்ளான் என்றேன்,
எதிரிகளின் சுளுக்கெடுபதற்க்கு அல்ல, பெரிய வீட்டு மாப்பிள்ளை ஆனதற்கு !!!

இந்த கவிதையில் வரும் நடிகர்கள் யார் என்று கண்டு பிடியுங்கள் பார்ப்போம் ?

அன்புடன்,
சிவசுப்பிரமணியன்***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக