சனி, 28 ஏப்ரல், 2012

கவிதை 20 - கோடீஸ்வரன்

ஊசலாடும் மனதையும் சஞ்சலமூட்டும் சலனங்களையும்
கண்டு அஞ்சாமல் முடிவில் மாற்றமில்லாமல் உறுதியோடு
இருந்தால் நீயும் கோடீஸ்வரன் ஆகலாம் *

அதிருஷ்டம் இருந்தால் பணம் வரும் என்று நினைக்காமல்
சுய உழைப்பில் சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூபாயையும்
ஏற்றுக்கொண்டால் நீயும் கோடீஸ்வரன் ஆகலாம் *

தான் செய்த தவறுக்கு பிறர் மீது பழி சுமத்துவதை விட்டு விட்டு
தோல்விகளை கண்டு துவண்டு விடாமல் அதை 
ஒரு பாடமாக எடுத்துக்கொண்டால் நீயும் கோடீஸ்வரன் ஆகலாம் *

வெற்றி களிப்பில் தலைகனம் ஏறிவிடாமல் உலகில் கற்றுக்கொள்ள
கடலளவு விஷயங்கள் இருப்பதை உணர்ந்து வாழ்க்கை
பயணத்தை தொடர்ந்தால் நீயும் கோடீஸ்வரன் ஆகலாம் *

உச்சியை தொட்டு விட்டோம் என்று எண்ணாமல் வளர்ச்சிக்கு வழி
ஒரு எல்லையில்லா பாதை என்பதை புரிந்து கொண்டு
இலக்குக்கு குறி வைத்தால் நீயும் கோடீஸ்வரன் ஆகலாம் *

என்ன சோதனை வந்தாலும் அதை அமைதியாகவும் பொறுமையாகவும்
சமாளித்து அபாயங்களை எதிர் கொள்ளும்
திறன் இருந்தால் நீயும் கோடீஸ்வரன் ஆகலாம் *

சந்தர்ப்பம் மற்றும் சூழ்நிலை கைதியாக மாறி விடாமல்
தெளிவான மனமும் குணமும் சேர்ந்திருக்க வலுவான
உடல் நலத்தை தக்க வைத்தால் நீயும் கோடீஸ்வரன் ஆகலாம் *

சொல் வேறு செயல் வேறு என்றில்லாமல் கொடுத்த வாக்கை
காப்பாற்றிக்கொண்டு பிறருக்கு நல்ல வழிகாட்டியாக
இருந்தால் நீயும் கோடீஸ்வரன் ஆகலாம் *

அடுத்தவர்களுக்கு கேடு நினைக்காமல் நேர்மையை
கடமை என்று பாவித்து உண்மையை உயிர் மூச்சாக
கடைபிடித்து வந்தால் நீயும் கோடீஸ்வரன் ஆகலாம் *

சமுதாயத்தின் பொது நலனில் அக்கறை செலுத்தவும் நாட்டின் முன்னேற்றத்திற்கு பாடு படவும் ஊக்கமளிக்கும் அத்தனை
வேலைகளையும் விரும்பி செய்தால் நீயும் கோடீஸ்வரன் ஆகலாம் *

விடாமுயற்சி , தொடர் பயிற்சி , இலட்சிய வெறி ,
தன்னம்பிக்கை என்று அடுக்கி கொண்டே போகும் அனைத்து
தீர்க்கமான தீர்மானமான ஆழ்ந்த சிந்தனைகள்
சூழ்ந்து கொண்டு எல்லாம் நன்மைக்கே எனும் நல்ல
கொள்கைகளை வாழ்நாள் முழுதும் நடைமுறையில்
பயன் படுத்தும் யுக்தி தெரிந்தால் உனக்குள் இருக்கும் சக்தி
ஞாபகபடுத்தும் நீயும் கோடீஸ்வரன் ஆகலாம் *

வெல்வோம்,
சிவசுப்பிரமணியன் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக