சனி, 21 ஏப்ரல், 2012

கவிதை 18 - நிழலும் நிஜமும்

கடைபிடித்து போற்றுங்கள் உங்கள் வெற்றியை,
நன்றி சொல்லுங்கள் அந்த வெற்றிக்கு காரணமான தோல்வியிடம் ***

நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் சந்தோஷத்தை,
பாராட்டு தெரிவிக்கவும் அந்த சந்தோஷத்திற்கு காரணமான எதிரிகளிடம் ***

நிலை நிறுத்துங்கள் உங்கள் தைரியத்தை,
சவால் விடுங்கள் அந்த தைரியத்தை கொடுத்த பயத்திடம் ***

தக்க வைத்து கொள்ளுங்கள் கிடைத்த பதவியை,
வாழ்த்து அனுப்புங்கள் அந்த பதவிக்கு ஆசைப்பட்ட போட்டியாளர்களிடம்***

செலுத்துங்கள் குடும்பத்திடம் உங்கள் பாசத்தை,
அசை போடுங்கள் அந்த பாசத்திற்கு தடையான கர்வத்திடம் ***

உடும்பு பிடி போல் பிடித்து கொள்ளுங்கள் விடாமுயற்சியை,
விடை பெறுங்கள் முயற்சியை தூண்டி விடும் வீழ்ச்சியிடம் ***

புன்னகை சிந்தி பறிமாறி கொள்ளுங்கள் இன்பத்தை,
எதிர்த்திடுங்கள் சோகங்களை பொட்டலமாக கொண்ட துன்பத்திடம் ***

நல்ல முறையில் பயன் படுத்துங்கள் நமக்கு கிடைத்த சுதந்திரத்தை,
தலை வணங்குங்கள் அன்று போராட்டம் நடத்திய மகான்களிடம் ***

பத்திரப்படுத்துங்கள் பெற்றோர்கள் சூட்டும் புகழாரத்தை,
மன்றியிடுங்கள் புகழை தேடி தந்த பெற்றோர்களின் கடின உழைப்பிடம் ***

பின்பற்றுங்கள் சரியான வழியில் நாடி வரும் பொறுப்புள்ள குணங்களை,
விலகியிருங்கள் தவறுகளை தொகுப்பாக கொண்ட அலட்சியத்திடம் ***

நம்புங்கள் எல்லாம் நன்மைக்கே என்று நினைக்கும் நல்லவனை,
உஷாரயிருங்கள் எல்லாம் தீமைக்கே என்று கேடு செய்யும் கெட்டவனிடம்***

மறந்து விடாதீர்கள் வாழ்க்கை பாடத்தை கற்பித்த அனுபவங்களை,
மதிப்பு கொடுங்கள் அனுபவங்களை ஏற்படுத்திய வாய்ப்புகளிடம்***

தொலைத்து விடாதீர்கள் உங்கள் சாதனைக்கு கிடைத்த தங்கப்பதக்கத்தை,
ஆச்சர்யப்படுங்கள் அந்த பரிசுக்கு விதைபோட்ட ஆசைகளிடம்***

பாலம் கட்டுவது போல் விரிவு படுத்துங்கள் நட்பு வட்டாரத்தை,
ஜாக்கிரதையாக இருங்கள் நட்புக்கு
பிரிவுண்டாக்கும் சுவர் போல் உள்ள தடைகளிடம்***

ஆனந்தமாய் கொண்டாடுங்கள் உங்கள் நேர்மைக்கு கிடைத்த நாணயத்தை,
முழுக்கு போடுங்கள் அந்த நாணயத்திற்கு
முற்றுப்புள்ளி வைக்கும் சோம்பலிடம்***

தட்டி எழுப்புங்கள் உங்களுக்குள் தூங்கிக்கொண்டிருக்கும் மாவீரனை,
அஞ்சாமால் போராடுங்கள் உங்களை அடக்கி வைத்த கோழையிடம்***

வளர்த்துக்கொள்ளுங்கள் கற்பனையை மேம்படுத்தும் கனவுகளை,
துவண்டு விடாதீர்கள் கனவுகளை
நினைவக்காமல் சிதைக்கும் ஏமாற்றத்திடம்***

தோண்டி எடுங்கள் உள்ளுக்குள் மறைந்து கிடக்கும் திறமைகளை,
நழுவ விடாதீர்கள் திறமைக்கு தோள்
கொடுக்கும் பொன்னான நிமிடங்களிடம்***

அடையாளம் காணுங்கள் உங்களை சூழ்ந்துள்ள
நிஜங்கள் மற்றும் நிழல்களை
பிறகு தேர்ந்தெடுங்கள் உங்களுக்கு வெற்றி வழி காட்டும் முறையான- சரியான பாதையிடம் *****

இப்படிக்கு,
சிவசுப்பிரமணியன் !!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக