ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

கவிதை 17 - நினைத்துப்பார்

பிடிக்காத உணவை சாப்பிடாமல் சலிப்புடன் ஒதுக்கி வைத்தால்,
பசி-பட்டினியோடு கிடக்கும் அநாதை ஏழைகளை நினைத்துப்பார்,

சின்ன-சின்ன கவலையோ,பிரச்சினையோ,கஷ்டமோ வந்தால்,
எதிர்நீச்சல் போட்டு போராடும் தன்னம்பிக்கையுள்ள
ஊனமுற்றோரை நினைத்துப்பார்,

வாழ்க்கையில் தொடர்ந்து தோல்விகளை மட்டும் சந்தித்தால்,
விடாமுயற்சியுடன் வெற்றிக்கு பாடுபட்டு சிகரம்
தொட்ட பிரபலங்களை நினைத்துப்பார்,

பிறரை குறை சொல்லுவதும், மற்றவர்களை கேலி செய்யும் போதும்,
அறிந்தும் அறியாமலும் செய்த அளவற்ற
தன் தவறுகளை நினைத்துப்பார்,

கையளவு கற்றுக்கொண்டு அதிகாரம் செலுத்தும் கர்வம் வந்தால்,
கடலளவு உலகம் தெரியாத கிணற்றுதவளையை நினைத்துப்பார்,

குற்றத்தை ஒப்புகொள்ளாமல் அடுத்தவர் மீது மழி சுமத்தும் போது,
பிழையான எண்ணத்தால் வரும் கொடூர விளைவுகளை நினைத்துப்பார்,

அடாவடியாக ஊர் சுற்றிக்கொண்டு வீண் செலவு செய்யும் போது,
இரவு பகல் பாராமல் பாடுபடும் பெற்றோர்களை நினைத்துப்பார்,

பணம்,பதவி,பட்டம்,புகழ் என்று அனைத்தும் சூழ்ந்துகொண்டால்,
உயர்ந்த அந்தஸ்தை பெற்றுத்தந்த உழைப்பு எனும்
ஏணிப்படிகளை நினைத்துப்பார்,

மாளிகை போல் வீடு இருந்தும் பேராசை அடங்கவில்லை என்றால்,
குப்பைத்தொட்டியில் பிறந்து வளர்ந்த பிஞ்சுகளை நினைத்துப்பார்,

சோகம்-சோதனை-கஷ்டம்-நஷ்டம் என்று வந்தால்,
உன் வாழ்க்கை உன் கையில் என்று நினைத்துப்பார்,

துன்பங்கள் துரத்தினால் ஆலயங்கள் சென்று கடவுளை தேடாமல்,
இன்பங்களை தந்தருளும் உனுக்குள் இருக்கும்,
இறைவனை மட்டும் நினைத்துப்பார் ******

அன்புடன்,
*சிவசுப்பிரமணியன்*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக