சனி, 28 ஏப்ரல், 2012

கவிதை 19 - காலச்சுவடுகள்

மலரும் நினைவுகள் , ஆசை கனவுகள் ;
ஒலிக்கும் ராகங்கள் , நகைக்கும் மேகங்கள் ;
தாலாட்டும் பாடல்கள் , உதவும் கரங்கள் ;
நேசிக்கும் முட்கள் , புன்னகை தரும் பூக்கள் ;
சலங்கை சத்தங்கள் , சங்கு முழங்கும் ஓசைகள் ;
துள்ளும் தாளங்கள் , மயக்கும் நாதஸ்வரங்கள் ;
மேடை கச்சேரிகள் , முடிசூடா மகுடங்கள் ;
இயற்க்கை சோலைகள் , பூங்குயில் பாடல்கள் ;
தேன்சிந்தும் முத்துக்கள் , புல்லாங்குழல் மெட்டுகள் ;
இன்னிசை கீதங்கள் , பளிச்சிடும் விளக்குகள் ;
தத்ரூபமான ஓவியங்கள் , செதுக்கிய கலைச்சிற்பங்கள் ;
அமைதி பூங்காக்கள் , கவர்ந்திழுக்கும் புள்ளிமான்கள் ;
மாயக்கண்ணாடிகள் , உலக அதிசயங்கள் ;
நடனமாடும் மயில்கள் , தொலைதூர நட்சத்திரங்கள் ;
வானளாவிய கோபுரங்கள் , ஆர்பரிக்கும் கல்தூண்கள்;
செந்தமிழ் மொழிகள் , வரலாற்று பொக்கிஷங்கள் ;
அருமை அருங்காட்சியங்கள் , மறந்த அரண்மனைகள் ;
தகவல் நூலகங்கள் , கட்டுக்கடங்காத கோட்டைகள் ;
சிங்கார சித்திரங்கள் , சிலிர்ப்பூட்டும் செங்கதிர்கள் ;

இப்படி அடுக்கி கொண்டே போகலாம் இந்த காலச்சுவடுகளை ,
இவை அனைத்தும் என் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்த காலச்சுவடுகள் !
இந்த காலச்சுவடுகளால் நம்மை நாம் பலமுறை மறந்து விடுகின்றோம் !
காலத்தின் கட்டளைக்கு மனிதன் தான் அடிமை ஆகிவிட்டானோ ,
இல்லை காலத்தின் போக்கில் மனிதன் ஒன்றி பொய் விட்டானோ ..!!!!

காலம் பதில் சொல்லட்டும்,
சிவசுப்பிரமணியன் ***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக