ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

கவிதை 16 - இந்தியன்

காதல் வசப்பட்டு கற்பனை கவிதை
எழுதுபவன் நான் அல்ல,
இயற்கையை ரசித்து விட்டு சிந்தனை சித்திரம்
வரைபவன் நான் அல்ல,
அமைதியான இடம் தேடி சின்னஞ்சிறு சிலை
செதுக்குபவன் நான் அல்ல,
மங்கையின் அழகை கண்டு மாணிக்க மாளிகை
கட்டுபவன் நான் அல்ல,
கடற்க்கரை காற்று வாங்கி பாசமலர் பாட்டு
பாடுபவன் நான் அல்ல,
முரட்டு மனிதன் போல் கோபப்பட்டு நடராஜர் நாட்டியம்
ஆடுபவன் நான் அல்ல,
மண்வாசனைக்கு அடிமை என்றாலும் பூஞ்சோலை பூக்கள்
நுகர்பவன் நான் அல்ல,
இசையில் மயங்கி விழுந்தாலும் கல்யாண கெட்டிமேளம்
கொட்டுபவன் நான் அல்ல,
முகம் பார்க்க உதவினாலும் கண்ணாடி கட்டிடத்தில்
வசிப்பவன் நான் அல்ல,
கடவுள் நம்பிக்கை இருந்தாலும் வாஸ்து படி வாசல்
பார்ப்பவன் நான் அல்ல,
ஆதங்கப்படும் ஆசாமி போல் கதிகலங்கும் கவலைகளுக்கு
வருத்தபடுபவன் நான் அல்ல,
ஆஸ்திகள் பல கொட்டி கிடந்தாலும் பேராசை பேர்வழியாக
மாறுபவன் நான் அல்ல,
ஆசைகளை மனதுக்குள் பூட்டி அதற்க்கு மகத்தான மகுடம்
சூட்டுபவன் நான் அல்ல,
காற்கால மழையில் நனைந்து காகித கப்பல்
விடுபவன் நான் அல்ல,
விலைமதிக்க முடியாத முத்து கிடைக்க கட்டுகடங்காத கடலில்
மூழ்குபவன் நான் அல்ல,
அரசியல்வாதி போல் தேர்தல் வெற்றிக்காக வாக்குறுதிகள்
கொடுப்பவன் நான் அல்ல,
காரியம் கை கூட வேண்டி கபட நாடகம் ஆடி கள்ளக்கன்னீர்
விடுபவன் நான் அல்ல,
மேடைகளில் மாமேதை போல் சொதப்பல் சொற்பொழிவு
நிகழ்த்துபவன் நான் அல்ல,
ஜாதி-கலவரம்-தீவிரவாதம் என்ற பெயரில் தேசத்துரோகம்
செய்பவன் நான் அல்ல,
"ஜெய்-ஹிந்த்" என்ற மந்திர சொல்லுக்கு கட்டுப்பட்டு,
தன உயிரை பற்றி கவலைப்படாமல் பல கோடி உயிர்களுக்கு,
போராடும் சமூக சேவகன் மட்டுமல்லாமல் எல்லையிலிருந்து
கொண்டே எதிரிகளிடமிருந்து நாட்டை காப்பாற்றும் தியாக
உள்ளம் கொண்ட இராணுவ வீரன் தான் நான் *****

இவை அனைத்திற்கும் மேலாக தேசிய கோடியை ஏற்றி
வைத்து மரியாதை செலுத்தும் நான் ஒரு சராசரி இந்திய குடிமகன் *****

ஜெய் ஹிந்த்,
சிவசுப்பிரமணியன் ****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக