ஞாயிறு, 14 அக்டோபர், 2012

கனவு 4 - பறக்கும் மனிதன்

முன்னுரை

நாம் காணும் கனவுகள் யாவும் பலித்து விடுமோ? அல்லது நடைமுறையில் நடக்கும் சம்பவங்களுக்கும் கனவுகளுக்கும் தொடர்பு இருந்து கொண்டே இருக்குமா? அதுவும் அதிகாலை கனவுகள் அப்படியே நம் வாழ்க்கையில் பிரதிபலிக்க கூடுமோ? அல்லது ஆழ் மனதில் அவ்வபோது நாம் சந்திக்கும் நபர்கள், காணும் காட்சிகள் பதிந்திருந்து கனவுகளாக தோன்றுகிறதா ?
இப்படி பல கேள்விக்கணைகள் ஒன்று சேர்ந்து கனவுகளை பற்றி ஒரு நீளமான சர்ச்சை உருவாக்குகின்றது !! 

கனவுகளை பற்றி ஆராய்ந்து அதற்க்கு பல மாறுப்பட்ட கருத்துக்களை முக்கோண மன முடிச்சுக்களை அவிழ்த்து அலசி பார்த்த மனோதத்துவ தந்தை - சிக்மண்ட் பிராயிட் (Sigmund Freud). கனவுகளை பற்றி மேலும் ஆழமாக தெரிந்து கொள்ள அவரது கட்டுரைகளும் புத்தகங்களும் நாம் படித்து பார்க்க வேண்டும் !!!

பறக்கும் மனிதன் 

என்ன அதிசயம் ! கனவில் தான் இப்படியெல்லாம் சாதிக்க முடிகிறது. சிறகுகள் இல்லை, விமானத்தில் பயணம் இல்லை,எந்த வித ஊன்றுகோலும் இல்லாமல் நான் உயர உயர பறந்து கொண்டே இருக்கின்றேன்.மேலும் உச்சத்தை அடையும் பொழுது மனதில் திக்கற்ற மகிழ்ச்சி. அப்படியே ஊர் சென்று விட்டு வரலாம், பார்க்காத இடங்களை பார்க்கலாம்,நினைத்த  மாத்திரத்தில் எங்கு வேண்டுமானாலும் பறந்து செல்லும் பாக்கியம், வெளிநாடுகள் செல்ல எந்த வித தடையும் இல்லை. 

பறவைகளுடன் போட்டி போட்டு , அலைக்கதிர்களிடமிருந்து சுதாரித்துக்கொண்டு மேலே மேலே பறக்கின்றேன்.உலக அதிசயங்களை நொடிகளில் சுற்றி பார்த்துவிட்டு திரும்புகின்றேன்.அதுவும் அந்த எகிப்து நாட்டின் மேலே பறந்து செல்லும் போது தங்கமாக மின்னும் கோபுரங்கள் தத்ரூபமாக காட்சியளிக்கின்றது.

வயல் வெளிகள், அருவிகள், செடி-கொடிகள், மலைகள், கடல் அலைகள் என்று இயற்கையை பறந்தவாறே ரசித்து செல்கிறேன். 
பறவைகள் யாவும் வானில் மிதக்கும் தோழர்கள். தரை இறங்க கால்கள் சொன்னாலும் மனம் மறுக்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக