ஞாயிறு, 7 அக்டோபர், 2012

கனவு 2 - நோக்கு வர்மம்

ஒரு இருட்டுச்சிறை முதலில் தெரிகிறது. அது சிறைச்சாலையா இல்லை ஏதோ மந்திரவாதியின் மாய அறையா என்று யோசனைகள் எனக்குள் மட்டும் !
பலகைகள் பல அடுக்கி வைத்திருப்பது காண முடிகிறது .

நானும் என் நண்பர்களும் ஒரு அறையிலும், வாட்டசாட்டமான இளைஞர்கள் சில அறையிலும், முதியவர்கள் சில அறையிலும் பயத்தில் குமுறுவது
செவிகளில் கேட்கிறது.

சற்று நேரம் கழித்து யாரோ நடந்து வரும் ஓசை ஒலிக்கிறது. இதயத்துடிப்பு 
அதிகரிக்க துவங்கிற்று. ஒரு கறுப்பு நிழல் உருவம் கண் முன்னே தெரிகிறது.
அதன் ராட்சத சிரிப்பு யாவரையும் பீதியில் ஆழ்த்தியது. ஆனால் எந்த பதற்றமும் நடுக்கமும் இல்லாமல் எனது அருகிலிருந்த நண்பன் ஒருவன்
தனது கண்களின் அசைவினால் மட்டும் அங்கு நிரம்பியிருந்த பலகைகள் 
ஒவ்வொன்றையும் பறக்க செய்தான். ஒவ்வொரு பலகையும் பறந்து வந்து அந்த நிழல் உருவத்தை பந்தாடியது. சற்று நேரத்தில் அறைக்குள் அடிமைகளாக அடைபட்டிருந்த அனைவரும் தனக்குள் ஏதோ சக்தி புதிதாக 
வந்து விட்டதை உணர்கின்றனர்.

நானும் என் மனதில் புது மாற்றத்தை உணர்கிறேன். எனது பார்வையால் ஒரு பலகையை மெல்ல உயர்த்த முயற்சி செய்கின்றேன்.பலகை உயருவதற்குள் கனவு முடிந்து விட்டது .... :)

பி.கு: இந்த கனவு ஏழாம் அறிவு படம் வெளியாவதற்கு முன்னாலே நான் எழுதி வைத்தது - ஆகையால் அந்த படம் பார்த்த பின்பு தான் இது எனக்கு தோன்றியிருக்கும் என்று வாசகர்கள் என்னிக்கொள்ள கூடாது. இந்த கனவின் தலைப்பு என்னவோ அதே படத்திலிருந்து சுட்டது தான் ;))

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக