செவ்வாய், 2 அக்டோபர், 2012

கனவு 1 - நாட்டுக்குள் சிங்கம்

கவிதை மழையில் இது வரை கவிதைகள் மட்டும் துளி துளியாக பொழிந்து யாவர் மனதையும் குளிர செய்தன என்று நம்புகிறேன். எப்பொழுதும் மழை மட்டும் பொழிந்தால் சுவாரசியம் குறைந்து விடுமே என்று, நான் காணும் அபூர்வ கனவுகளையும் இந்த கவிதை மழையில் ஒரு வானவில் போல் , ஒரு மின்னல் போல் அல்லது ஒரு இடி போல் சேர்த்து கொள்ள விரும்புகிறேன்...

கனவுகளுக்காக ஒரு கனவு மழை ஆரம்பிக்கலாமே என்று நீங்கள் கேட்கலாம் :) - ஆனால் நாம் காணும் கனவுகள் யாவும் நினைவில் தங்குவிதல்லை என்பது யாவரும் அறிந்த உண்மை. அதனால் நான் ஞாபகம் வைத்து எழுதிய சில சிறந்த கனவுகள் மட்டும் இந்த கவிதை மழையில் உலா வரும் .... இந்த கனவுகளை என்னுடைய சிறு கதைகளாகவோ ஒரு பக்க கதைகளாகவோ நீங்கள் நினைத்து கொள்ளலாம் !

" ஒரு சின்ன கிராமம் - எழில் கொஞ்சும் பூஞ்சோலைகளின் நடுவில் அழகாக தென் படுகிறது. ஆனால் கிராமத்தில் வாழும் மக்கள் அனைவரும் பயத்தில் மூழ்கியிருந்தார்கள். வெகு நேரம் அழுகையும் சோகமும் - கிராமம் முழுக்க பரவியிருப்பது தெரிகிறது. இரவு நேரம் நெருங்கி விட்டது... 

கிராம மக்கள் யாவரும் வீட்டினுள் கதவை பூட்டிக்கொண்டு இன்று யார் உயிர் பலியாக போகிறதோ என்று புலம்பி கொண்டனர். ஜன்னல் வழியே நானும் என் பெற்றோர்களும் பார்க்கும் காட்சி தெரிகிறது.திடீர் என்று ஒரு உறுமல் சத்தம் ஒலிக்க துடங்கியது.அங்கு பார்த்தால் ராஜ நடை போட்டுக்கொண்டு ஒரு சிங்கம்! 

அந்த கிராமமே பீதியில் இருப்பதின் காரணம் இந்த சிங்கத்தின் வேட்டை தான் என்று எனக்கு புரிந்தது.எப்படி இந்த சிங்கத்தின் பிடியிலிருந்து ஒரு கிராமத்தையே காப்பாற்றுவது என்று யோசித்து முடிப்பதற்குள் கனவு கலைந்து விட்டது" ...... :)

மீண்டும் அடுத்த கனவில் சந்திப்போம்,
சிவசுப்பிரமணியன் ***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக