நானும் என் நண்பர்களும் சுற்றுலா செல்ல எங்களை தயார் படுத்தி
கொண்டிருந்தோம். கப்பலில் பயணம் துவங்கி நாட்டின் எல்லையை
கடந்து விடுகிறோம். பிறகு நாங்கள் உள்ளூர் ரயிலில் பயணத்தை தொடர்கிறோம்.ஒரு வழியாக சுற்றுலா தலம் ஆன அந்த அழகிய தீவுக்கு வந்து விட்டோம்.
பிறகு நாங்கள் கண்ட காட்சிகள் யாவும் விநோதமாக இருந்தது.
எந்த மொழியில் வேண்டுமானாலும் பாடும் குயில் !
எந்த கேள்வியை கேட்டாலும் அதற்க்கு விடை தருகிறது பேசும் மரம் !
தீவை முழுதும் சுற்றி காட்ட பறக்கும் கம்பளங்கள் என்று ஏகப்பட்ட அதிசயங்கள் !
நானும் எனது நண்பர்களும் ஒரு கம்பளத்தில் ஏறி விட்டோம்.
சொர்க்கமாகதான் இந்த தீவு இருந்திருக்குமோ என்று நான் சிந்தித்து
கொண்டே பறக்கும் கம்பளத்தின் கீழே இருந்த கோபுரங்கள்,
மாளிகைகள் அனைத்தையும் ரசித்து வந்தேன். ஆனால் திடீரென்று
அந்த பறக்கும் கம்பளம் ஓர் இடத்தில் நின்று விட்டது. அந்தரத்திலிருந்து
நாங்கள் சற்றே தடுமாறி பார்வையை கீழே திசை திருப்பினோம்.
அதிர்ச்சியில் என்னை உறையச்செய்து விட்டது அங்கே நடந்த
திகில் காட்சி ! மனிதர்கள் யாவரும் வன்முறையில் ஈடுபட்டு ஒருவர்
தலையை மற்றொருவர் சர்வ சாதாரணமாக சீவிக்கொண்டிருன்தனர்.
எங்கும் இரத்த வெள்ளம். நாங்கள் உடனே அங்கிருந்து தப்பித்து விடவே
எண்ணினோம்.ஆனால் கம்பளம் அங்கிருந்து கடைசி தலை சாயும் வரை
அசையவே இல்லை.பயத்தில் பிறகு என்ன நடந்தது என்று முழித்து பார்த்தால் - அட கனவு ;)
கனவுகள் காண்போம்,
சிவசுப்பிரமணியன் ***
கொண்டிருந்தோம். கப்பலில் பயணம் துவங்கி நாட்டின் எல்லையை
கடந்து விடுகிறோம். பிறகு நாங்கள் உள்ளூர் ரயிலில் பயணத்தை தொடர்கிறோம்.ஒரு வழியாக சுற்றுலா தலம் ஆன அந்த அழகிய தீவுக்கு வந்து விட்டோம்.
பிறகு நாங்கள் கண்ட காட்சிகள் யாவும் விநோதமாக இருந்தது.
எந்த மொழியில் வேண்டுமானாலும் பாடும் குயில் !
எந்த கேள்வியை கேட்டாலும் அதற்க்கு விடை தருகிறது பேசும் மரம் !
தீவை முழுதும் சுற்றி காட்ட பறக்கும் கம்பளங்கள் என்று ஏகப்பட்ட அதிசயங்கள் !
நானும் எனது நண்பர்களும் ஒரு கம்பளத்தில் ஏறி விட்டோம்.
சொர்க்கமாகதான் இந்த தீவு இருந்திருக்குமோ என்று நான் சிந்தித்து
கொண்டே பறக்கும் கம்பளத்தின் கீழே இருந்த கோபுரங்கள்,
மாளிகைகள் அனைத்தையும் ரசித்து வந்தேன். ஆனால் திடீரென்று
அந்த பறக்கும் கம்பளம் ஓர் இடத்தில் நின்று விட்டது. அந்தரத்திலிருந்து
நாங்கள் சற்றே தடுமாறி பார்வையை கீழே திசை திருப்பினோம்.
அதிர்ச்சியில் என்னை உறையச்செய்து விட்டது அங்கே நடந்த
திகில் காட்சி ! மனிதர்கள் யாவரும் வன்முறையில் ஈடுபட்டு ஒருவர்
தலையை மற்றொருவர் சர்வ சாதாரணமாக சீவிக்கொண்டிருன்தனர்.
எங்கும் இரத்த வெள்ளம். நாங்கள் உடனே அங்கிருந்து தப்பித்து விடவே
எண்ணினோம்.ஆனால் கம்பளம் அங்கிருந்து கடைசி தலை சாயும் வரை
அசையவே இல்லை.பயத்தில் பிறகு என்ன நடந்தது என்று முழித்து பார்த்தால் - அட கனவு ;)
கனவுகள் காண்போம்,
சிவசுப்பிரமணியன் ***
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக