ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

கவிதை 40 - ரசனை

வானில் சிரிக்கும் நிலவை
ரசிக்க மறந்து விட்டேன்,
அருகிலிருக்கும் நிலவை பார்த்து  ....

மலை உச்சியிலிருந்து விழும் அருவியை
ரசிக்க மறந்து விட்டேன்,
அருவியாய் கொட்டும் உன் பேச்சை கேட்டு ....

நிம்மதி தரும் இயற்கையின் மௌனத்தை
ரசிக்க மறந்து விட்டேன்,
எழில் கொஞ்சும் உன் மௌனப்புன்னகையால் ....

ஆர்பரிக்கும் நட்சத்திரங்களின் அழகை
ரசிக்க மறந்து விட்டேன்,
அழகான  ஓவியமாக நீ காட்சி தருகையில் ....

மெல்ல வருடும் தென்றலின் தீண்டலை
ரசிக்க மறந்து விட்டேன்,
அந்த மின்மினி பூச்சிகளை நீ துரத்தும் பொழுது ....

மெய் சிலிர்க்கவைக்கும் வெள்ளி மலர்களை
ரசிக்க மறந்து விட்டேன்,
சந்தோஷத்தில் உன் முகம் மலர்ந்த போது .....!

---சிவசுப்பிரமணியன் ***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக