ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

கவிதை 38 - மாற்றி யோசி

புது மொழி ஒன்றை கற்றுக்கொள்,அதை
உன் பொழுதுப்போக்காக மாற்றிக்கொள் !

தினம் ஒரு திருவிழா கொண்டாடு,அது
உன் மன உளைச்சல்களை அழித்திடும் வேரோடு !

எழு மணி நேர தூக்கம் ஒரு பக்கம், அரை மணி
நேர உடற்ப்பயிற்சி மறு பக்கம் - மறந்து விடாதே !

பெற்றோர்களோடு மனம் விட்டு அரட்டையடி,
நண்பர்களோடு பகிர்ந்திடு நகைச்சுவைக்கடி !

நல் நூல்களில் கிடைக்கும் அறிவுரைகளை பின்பற்று,
தன்னம்பிக்கை தான் என்றும் உற்சாக ஊற்று !

துக்கம் வந்து சூழ்ந்து கொண்டால் மனம் விட்டு அழுது விடு,
உல்லாசம் உச்சியை அடைந்து விட்டால்,
வெட்கத்தை விட்டு ஆட்டம் போடு !

கற்பனைகளுக்கும் கனவுகளுக்கும் தடை போடாதே,
ஒரு நொடிக்குள் முடியும் விஷயத்தை தள்ளி போடாதே !

பிறர் சிறு முன்னேற்றம்மடைந்தால் கூட பொறாமை படாமல்
மென்மேலும் வளர்ச்சி பெற பாராட்டு,

அவசர உலகில் ஒய்வு எடுக்க மனம் வேண்டினால்
பாசமுள்ள அன்னை மடி தனில் தாலாட்டு !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக