புதன், 15 ஆகஸ்ட், 2012

கவிதை 39 - கற்பனை

நிலவு வரை மேகங்கள் 
ஒவ்வொன்றும் படிக்கட்டுகளாக,

நெடு நெடுவென வளர்ந்து நிற்கும்  தென்னை மரங்கள்
ஒவ்வொன்றும் கூட கோபுரங்களாக,

காற்றோடு கலந்துரையாடும் பனை மரங்கள்
ஒவ்வொன்றும் காத்தாடிகளாக,

வானத்தில் சிறகடிக்கும் வண்ண பறவைகள்
ஒவ்வொன்றும் விமானங்களாக,

ஆழ்கடலில் பதுங்கியிருக்கும் திமிங்கலங்கள்
ஒவ்வொன்றும் நீர்மூழ்கி கப்பல்களாக,

கொடுங்காட்டில் பாய்ந்தோடும் மிருகங்கள்
ஒவ்வொன்றும் ரயில் வண்டிகளாக,

எட்டாத உயரம் கொண்ட மாமலைகள்
ஒவ்வொன்றும் பளிங்கு மாளிகைகளாக,

புதியதோர் இயற்க்கை உலகம் - கனவு காணும்
பொழுதே என்ன அற்புதம் *****

-- சிவசுப்பிரமணியன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக