சில்லென்று அருவி தாளம் போட,
புல்லாங்குழல் இசை மெல்ல ஒலிக்க,
ஜில்லென்று காற்று நடனம் ஆட,
பல்லாங்குழி ஓசை துணை கொடுக்க,
சில் வண்டுகள் பூக்களோடு ரீங்காரமிட,
சிட்டுக்குருவிகளின் சலசலப்பு சத்தம் கேட்க,
கயல்விழி மான்கள் துள்ளி குதிக்க,
பட்டாம்பூச்சி கூட்டம் வட்டம் போட,
தேன்மொழி தமிழில் திருவாய் மலர்ந்திடுவாய் ***
தடதடவென மேகங்கள் இடம் மாற,
படபடவென பச்சைக்கிளிகள் பறந்தோட,
மளமளவென மரங்கள் தலையாட்ட,
பளபளவென புல்வெளிகள் புதிர்போட,
விறுவிறுவென மழைத்துளிகள் மன்னைதொட,
சடுகுடுவென மலைகள் மோதி விளையாட,
கரகரவென கடல் மீன்கள் நீச்சலடிக்க,
இயற்க்கைத்தமிழை ரசித்து மகிழ்ந்திடுவாய் ***
-- சிவசுப்பிரமணியன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக