சனி, 28 ஜூலை, 2012

கவிதை 35 - பக்கம் பக்கமாக

பக்கம் பக்கமாக நான் உன்னுடன் பேச நினைத்தாலும்,
உன் பக்கம் என் விழிகள் சென்ற போது முந்தியது மௌனம் ***

பக்கம் பக்கமாக நான் உனக்கு மடல் எழுத நினைத்தாலும்,
உன் பக்கம் அனுப்பும் போது வார்த்தைகள் இல்லாத கடிதம் ***

பக்கம் பக்கமாக நான் ஓவியம் வரைய நினைத்தாலும்,
உன் பக்கம் எட்டியது சுவர் இல்லாத சித்திரம் ***

பக்கம் பக்கமாக நான் சிற்பம் செதுக்க நினைத்தாலும்,
உன் பக்கம் வந்து சேர்ந்தது கண்ணுக்கு தெரியாத கலைநுட்பம் ***

பக்கம் பக்கமாக நான் பாடல் இசைக்க நினைத்தாலும்,
உன் பக்கம் வந்து வாசிக்கும் போது மௌன ராகம் ***

பக்கம் பக்கமாக நான் கவிதை படைக்க நினைத்தாலும்,
உன் பக்கம் விண்ணப்பிக்க கூட இல்லை ஒரு ஹைக்கூ ***

பக்கம் பக்கமாக நான் படங்கள் இயக்க நினைத்தாலும்,
உன் பக்கம் நானே இயக்கமில்லாத இயந்திரம் ***

பக்கம் பக்கமாக நான் கதைகள் சொல்ல நினைத்தாலும்,
உன் பக்கம் வந்து நின்ற போது ஸ்தம்பித்து விடுகிறது கதைக்களம் ***

பக்கம் பக்கமாக நான் இப்படியே வரிகளை அடுக்கி கொண்டே,
சிந்தனைகளை சங்கிலிகளால் பிணைத்து கொண்டே,
போக நினைத்தாலும் ---

உன் பக்கம் .

"உன் பக்கம்" --- என்று தட்டச்சு தப்பாமல் அடித்த அடுத்த நொடி
விழுந்தது ஒரு பெரிய முற்றுப்புள்ளி ***

இப்படிக்கு,
சிவசுப்பிரமணியன் ***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக