வியாழன், 26 ஜூலை, 2012

கவிதை 34 - சுனாமி காவியம்

கடல் அலைகள் சுனாமி என்ற உருவெடுத்து பிஞ்சு
உள்ளங்களின் கனவை கலைத்தன !

இயற்கையின் சீற்றத்தால் சிசுவை இழந்த தாயின்
கண்களில் கண்ணீர் கரைந்தன !

ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சுனாமி மனிதனின்
எதிர்கால நினைவுகளை சிதைத்தன !

ராட்சத அலைகளின் தோற்றத்தால் பதுங்கியிருந்த
எத்தனையோ கிராமங்கள் அழிந்தன !

கடல் தான் நமக்கு வாழ்க்கை என்று நம்பியிருந்த
மீனவர்களின் எண்ணங்கள் புதைந்தன !

சற்றும் எதிர்பாராத இந்த மின்னல் வேக அலைகள்
நொடியில் உயிர்களை பலி வாங்கின !

உலகின் அமைதியை நிமிடத்தில் சிதற வைத்த
சுனாமியால் சோகம் தான் மிஞ்சின !

ஏழைகளின் நிம்மதியை தொலைத்த ஆக்ரோஷ அலைகள்
துன்பத்தைத்தான் அள்ளித்தந்தன !

சொந்தங்களை இழந்து தவிக்கும் குடும்பங்களின் கதறல்
சத்தம் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன !

மீண்டும் சுனாமி வராமல் இருக்க ஆண்டவனை வணங்கி
கோடி இதயங்கள் பிரார்த்தனை செய்கின்றன !

முடியட்டும் இந்த சுனாமி காவியம் ;
மலரட்டும் புது உலகம்;
தொடரட்டும் புது யுகம் !!!

--சிவசுப்பிரமணியன் ***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக