சனி, 21 ஜூலை, 2012

கவிதை 31 - மறந்து போனது

நாகரீக சகவாசம் அதிகரித்ததால் -
மறந்து போனது கிராமத்து வாசம் !

நெருக்கடி பயணங்கள் தொடர்ந்ததால் -
மறந்து போனது அரும்புகளின் குறும்புகள் !

நவீன கட்டிடங்கள் பல அமைந்ததால் -
மறந்து போனது இயற்க்கை அழகு !
'
ஜாதிகள் எண்ணிக்கை பெருகியதால் -
மறந்து போனது மனித ஒற்றுமை !

பழக்க வழக்கங்கள் மாறி வருவதால் -
மறந்து போனது கண்ணிய கலாச்சாரம் !

சுயநலமும் அலட்சியமும் ஆக்கிரமிப்பதால் -
மறந்து போனது சமுதாய அக்கறை !

ஊழலும் அநியாயமும் தலைதூக்கியதால்
மறந்து போனது சுதந்திர புரட்சி !

கலவரமும் தீவிரவாதமும் சகஜமானதால்
மறந்து போனது மன அமைதி !

இனிமேலாவது மறக்காமல் இருப்போம்,

******சிவசுப்பிரமணியன் *****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக