செவ்வாய், 24 ஜூலை, 2012

கவிதை 33 - கலியுக காதல்

காயப்படுத்தும் முள்ளும் அதன் மேல் சிரிக்கும் மலரும்,
சேர்ந்த கலவை தான் காதல் ***

ஓளி கொடுக்கும் ஜோதியும் அதன் கீழ் அழுது வடியும்
மெழுகுவர்த்தியும் சேர்ந்தால் தான் காதல் ***

வானத்தில் ஜொலிக்கும் நிலவும் அதன் அருகே கண்
சிமிட்டும் நட்சத்திரங்களும் சேர்ந்தால் காதல் ***

காவியங்கள் பல உருவாக்கி வரலாற்றில் இடம்
பிடித்து விட்டது இந்த தூய்மையான காதல் ***

யுகம் யுகமாய் வித விதமாய் அவதாரங்கள் பல
எடுத்து விட்டது இந்த முரட்டு காதல் ***

வயது-வரம்பு பார்க்காமல் , நேரம்-காலம் பார்க்காமல்,
வாஸ்து-சாஸ்திரம் பார்க்காமல் , ஜாதி-சம்பிரதாயம் பார்க்காமல்,
வளர்ந்து கொண்டே போகிறது காதல் ***

இந்த மூன்றெழுத்து சொல்லுக்கு முடிவு தான் என்ன ?

விடுகதையா இல்லை தொடர்கதையா என்று மனதை
வாட்டி வதைப்பது ஏன் ?

இந்த குழப்பமான கேள்விகளுக்கு தீர்வு காண்பது எப்படி?

மனிதனை பைத்தியம் ஆக்குவதும் காதல் தான் !
தற்கொலைக்கு தூண்டுவதும் காதல் தான் !

அவரவர் பயன்படுத்தும் முறையில் தான் தற்போது,
சுழல்கிறது கலியுக காதல் *****

--- சிவசுப்பிரமணியன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக