ஞாயிறு, 22 ஜூலை, 2012

கவிதை 32 - காதல் வலி

* பல்வேறு கோணங்களில் , பல்லாயிரம் ஆண்டுகளாக
   புது புது அர்த்தங்களுடன் கோடிக்கணக்கான
   இதயங்களுள் நுழைந்து விடுகிறது காதல் !

* கருணை குணமோ மகத்தான காதலுக்கு உண்டு,
   ஆனால் கல்லறை ஏன் அழுகிறது காதலர்கள்
    ஜோடி சேர்ந்தும் சேராமலும் வருவதை கண்டு ?

* காதல் தோல்வி கொடுக்கும் வலியில்,
  ஆண்கள் சிலர் தாடி வளர்ப்பதும்,
  பெண்கள் சிலர் தற்கொலை செய்து கொள்வதும்,
  வேடிக்கை அல்ல வாடிக்கை !!!

* புறாக்களை காதலுக்காக தூது அனுப்பிய
   அந்த காலம் மலையேறிவிட்ட பிறகும்,
   மின்னஞ்சல்கள் வழி இந்த காலக்காதல்,
   கல்யாணத்தில் கனிந்து விவாகரத்து வரை
   போன பிறகும், காதலுக்காக உயிரைத்தியாகம் செய்யும்
   சோகம் மட்டும் இன்னும் தொடர்கிறதே ......!

* சில காதல் துயரங்களோ சரித்திர வரலாறு ;
   பல காதல் பயணங்களோ விசித்திர தகறாறு !!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக