ஞாயிறு, 4 நவம்பர், 2012

கனவு 5 - உயிர்

நானும் என் நண்பனும் கடற்க்கரை ஓரம் நடந்து செல்லும் காட்சி ..
பிறகு எங்களுக்குள் ஒரு சவால் எழுகிறது. 
யார் அதிக நேரம் கடலுக்குள் மூச்சு பிடித்து இருப்போம் என்று ?
முதலில் என் நண்பன் கடலுக்குள் செல்கிறான்.வெகு நேரமாகியும் அவனைக்காணவில்லை. பிறகு நானும் ஆழ் கடலில் மூழ்கிறேன்.

 கடலுக்கடியில் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. என் நண்பன் ஆழ்கடலில் உயிர் வாழும் திறனை கைவசப்படுத்தியிருந்தான் என்று முதலில் வியந்தேன்.பிறகு தான் புரிந்தது நானும் பிற கடல் உயிரினங்களைப்போல் மூச்சு விட்டுக்கொண்டிருகின்றேன் என்று !

அங்கேயே வாழ்ந்து விடலாமென்று நினைத்த நாங்கள் சர்வ சாதாரணமாக நீந்தி சென்றோம்.வைர மாளிகை , ஆர் பறிக்கும் வண்ண மீன்கள், திமிங்கலங்கள்,சுறாக்கள் என்று உலா வந்தோம். உல்லாச பயணம் தான்.

இயற்க்கை அன்னை கடலுக்கடியில் அத்துணை பொக்கிஷத்தையும் பாதுக்காப்பாக வைத்திருக்கிறாள் என்றே சொல்லலாம்.ஆனால் செயற்கையாக மனிதன் படைத்த மாபெரும் கப்பல்களும்,படகுகளும், நீர்மூழ்கி கப்பல்களும் கண்ணுக்கு தெரியவில்லை.சில இடங்களில் மூச்சு விட கஷ்டமாக இருந்தது. அப்போதே புரிந்து விட்டது - மனிதன் உருவாக்கும் செயற்கை ரசாயன பொருட்களால் கடலில் வாழும் உயிரினங்களுக்கு எவ்வளுவு ஆபத்து இருக்கின்றது என்பது.

தரையில் ஊர்ந்து செல்லும் எறும்பு,ஆகாயத்தில் பறந்து செல்லும் சிட்டு குருவி, கடலில் வாழும் சிறு மீன்கள் - யாவும் கண்ணுக்கு தெரியாமல் இருக்கலாம் - ஆனால் அவைகள் யாவும் மனிதனை போல் உயிர் வாழும் உயிரினம் தான் என்பதை மறவாமல் இருப்போம் *** 

--சிவசுப்பிரமணியன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக