கவிதை மழை
வெள்ளி, 11 டிசம்பர், 2015
10 நொடி கதை 3 - பாசம்
பாட்டியை பார்த்தவுடன் அழுகையை நிறுத்தி புன்னகை பூத்தது மடிக்கணினியின் ஒளித்திரையில் மழலை முகம்.
--சிவசுப்பிரமணியன்
செவ்வாய், 8 டிசம்பர், 2015
10 நொடி கதை 2 - தரிசனம்
“இன்னைக்குள்ள கடவுள பார்த்திருலாமா?” வரிசையின் கடைசியில் நின்ன பக்தன் ஒருவன் கேட்டான். “உடல் முடியாம கூலி வேலை செய்யும் உன்னை பெற்ற தாயை முதலில் பார்.” என்றது ஒரு குரல். திரும்பி பார்த்தால் யாரும் இல்லை.
--சிவசுப்பிரமணியன்
ஞாயிறு, 6 டிசம்பர், 2015
10 நொடி கதை 1 - பசி
அடுக்கு மாடி வீட்டின் உப்பரிகையிலிருந்து பனிக்கூழ் சுவைக்கும் பாப்பா வேடிக்கை பார்த்துகொண்டிருந்தது குடிசை திண்ணையில் தாய்ப்பாலுக்காக அழுதுகொண்டிருக்கும் பாப்பாவை !
-- சிவசுப்பிரமணியன்.
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)