ஞாயிறு, 11 மார்ச், 2012

கவிதை 10 - அவர்கள்

தனிமையில் வாழும் காலம் தான் வந்தார்கள் அவர்கள்,
சிறு புன்னகையால் தன் பக்கம் இழுத்துக்கொண்டார்கள் ...
கஷ்டப்படும் காலம் உற்சாகமாய் கை கொடுத்தார்கள்,
வருத்தங்கள் யாவும் நொடியில் மறக்க செய்தார்கள் ...
மன ஒற்றுமையை புரிய வைத்தார்கள் எனக்கு,
சுக-துக்கங்களை சமமாக பகிர்ந்து கொண்டு,
இருள் சூழ்ந்த வாழ்வின் வெளிச்சமாக திகழ்ந்தார்கள் !!!

தோழமை தேடி திரியும் போது வாழ்வின் வசந்தமாக,
வானத்தில் மின்னும் நட்சத்திரம் போல் ஜொலித்தார்கள் ...
பாசத்திற்கும் நேசத்திற்கும் பாலம் அமைத்தார்கள்,
அன்புக்கும் பண்புக்கும் புது இலக்கணம் படைத்தார்கள் ...
சோதனை வரும் போதெல்லாம் சோகங்களை கூட மூட்டை 
கட்டி தன் முதுகில் சந்தோஷமாக சுமப்பார்கள் !!!

சுமைகள் எல்லாம் சுகமானது என்று ஆதரவு தந்தார்கள்,
ஆபத்து வந்தால் சலிக்காமல் உதவிக்கரம் நீட்டினார்கள் ...
அமைதியில் கூட உணர்ச்சிகளை புரிந்து கொள்வார்கள் ,
வாழ்நாள் முழுதும் என் நிம்மதிக்கு பாடு பட்டவர்கள் !!!

கல்தூண் போல் என்றும் பாதுகாப்பளித்தார்கள்...
நட்புக்கு எல்லை இல்லை என்று தொடர்ந்து சரித்திரம் 
உருவாக்கியவர்கள் வேறு யாரும் அல்ல ,
என் உள்ளம் கவர்ந்த உண்மை நண்பர்கள் ....!!!


நட்புடன்,
சிவசுப்பிரமணியன் !

கவிதை 9 - இயற்க்கை ராணி

குளிர்காலத்தில் பூத்திருக்கும் சின்ன ரோஜாவே,
நீ நாள்தோறும் காட்சி அளிக்கும் அழகிய பதுமை !
அன்புடன் கூடிய நறுமணம் வீசும் பொழுது,
நீ தோன்றுவதோ சிரிக்கும் சிகப்பு பொம்மை !

பூந்தோட்டத்தின் நடுவிலே மாமரத்தின் நிழலிலே,
தென்றல் தொடும் போது தலை அசைக்கும் பூவே !
முத்துக்கள் போல் பனித்துளி விழும் நேரம்,
நீ துள்ளலோடு ஆட்டம் போடும் குட்டித்தீவே !

ஜன்னல் வழியே உன்னை விழி வைத்து பார்க்கும் போது,
கவர்ந்திழுக்கும் உன் சிலிர்ப்பூட்டும் மகிழ்ச்சி !
உன்னை தொட வந்தால் முள் குத்தி இரத்தம் வடிந்தாலும்,
யாவராலும் பாராட்ட படும் உன் மாபெரும் எழுச்சி !

ஒவ்வொரு இதழ் ஸ்பரிசிக்கும் போதும் ஒலித்திடும் பாடல்,
உன் வாசனையால் பரவசம் அடையும் புத்துணர்ச்சி !
உனக்கு இயற்க்கை ராணி மகுடம் சூட்டினால்,
காதலர்களுக்கு உண்டாகும் புது கிளர்ச்சி !

கனவு கண்டேன் - தோட்டம் முழுதும் ரோஜாக்கூட்டம்,
காதல் பரிசாக உன்னை தேர்ந்தெடுத்தாலும் பூக்கள் மத்தியில்
உனக்கில்லை இனி வீழ்ச்சி ***

இப்படிக்கு,
சிவசுப்பிரமணியன் !

கவிதை 8 - கோலங்கள்

உள்ளம் எனும் கடிதத்தில் உள்ள எழுத்துக்கள் யாவும்
சிதறி கிடக்கும் எண்ணங்கள் .....
உறவு எனும் கடலில் உள்ள முத்துக்கள் யாவும் 
நாள் தோறும் வண்ணங்கள் .....


புன்னகை எனும் பூக்களில் உள்ள வண்டுகள் யாவும்
தேன் ஊறும் கன்னங்கள் .....
சமயம் எனும் சமுத்திரத்தில் உள்ள அலைகள் யாவும்
நொடியில் மறையும் தருணங்கள் .....


நரகம் எனும் பாதாளத்தில் உள்ள குழிகள் யாவும்
துன்பம் தரும் சகுனங்கள் .....
வாழ்க்கை எனும் புத்தகத்தில் உள்ள அர்த்தங்கள் யாவும்
இன்பம் தரும் லக்ஷணங்கள் .....


குடும்பம் எனும் சொர்க்கத்தில் உள்ள உணர்ச்சிகள் யாவும்
வாசனை கொடுக்கும் சந்தனங்கள் .....
பரதம் எனும் கலையில் உள்ள நாட்டியங்கள் யாவும்
ரசிக்க தூண்டும் நடனங்கள் .....


சுனாமி எனும் போர்க்களத்தில் உள்ள விபத்துகள் யாவும்
சோகம் தரும் மரணங்கள் .....
இசை எனும் பாடலில் உள்ள ராகங்கள் யாவும் 
சப்தஸ்வரங்கள் சேர்ந்த சரணங்கள் .....


எவனோ ஒருவன் எக்கேடு கெட்டு போனால் நமக்கென்ன 
என்று உலவும் மனித கோலங்கள் ......!!!!


நேசமுடன்,
சிவசுப்பிரமணியன்.

ஞாயிறு, 4 மார்ச், 2012

நகைச்சுவை துணுக்கு

ஊட்டியில் சுட்டிகள் அடிக்கும் லூட்டி தாங்காமல் அனைவரையும்
வீட்டினுள் பூட்டி வேட்டி மடிச்ச தாத்தாவையும் கூட்டி கிட்டு
பாட்டி உசிலம்பட்டிக்கு புறப்பிடும் போது, தொட்டி மேல வட்டி
கட்டி வாங்கி வச்ச பானைச்சட்டி, பாட்டி கை தட்டி 
தாத்தா முட்டியை பேத்திடுச்சு ...!
பொட்டிய எடுத்து கிட்டு பாட்டி மட்டும் கிளம்ப,
போட்டி போட்டு பேட்டி காண கூட்டம் கூடுச்சு ....!

கவிதை 7 - கேட்டீங்களா ?

திகில் நாவல்களில் மூழ்கியிருந்த கலைஞனின் கவனத்தை
   சிதற வைத்தது யாரோ ...?


சமையலறையில் பம்பரமாக வேலை பார்த்துக்கொண்டிருந்த 
வீட்டுகாரியின் கவனம் போனது எங்கோ ...?


அலுவலகத்திற்கு செல்ல தயாராக இருந்த குடும்பத்தலைவரை
திசை திருப்பியது யாரோ ...?


வாசலில் அரட்டையடித்து கொண்டிருந்த பாட்டிகள் கூட்டணியை 
சற்று எட்டிப்பார்க்க தூண்டியது யாரோ ...?


குட்டிச்சுவரில் வெட்டி கதை பேசிய இளைஞர்கூட்டத்தை 
திரும்பி பார்க்க சொன்னது யாரோ ...?


அந்த யாரோ வேறு யாரும் அல்ல - 
தெரு முனையில் பள்ளிக்கு போகாமல் அடம்பிடிக்கும்
ஒரு சுட்டிக்குட்டியின் மழலை கீச்சுக்குரல் ...!

அன்புடன்,
சிவசுப்பிரமணியன் !

கவிதை 6 - உலகம் புதுசு

உலகில் வாழும் அத்தனை உயிரினங்களுக்கும் 
விதம் விதமாக தோற்றங்கள் ....;
காலம் மாறுவது உண்மை என்று நிரூபிக்க 
தினம் தினம் மாற்றங்கள் ....;
மனித வாழ்க்கையில் மேடு பள்ளம் போல்
சற்று தடுமாறும் ஏற்றங்கள் ....;
மனிதனின் பாவச் செயல்களுக்கு பதிலடி கொடுக்கும்
இயற்கையின் சீற்றங்கள் ....;
தீர்ப்பு வழங்க சட்டம் இருந்தாலும் நரகத்தில்
தண்டிக்க வேண்டிய குற்றங்கள் ....;
வாழ்க்கை பாதையில் தடம் மாறாமல் இருக்க
தவிர்க்க வேண்டும் ஏமாற்ற்றங்கள் ....;
புரியாத புதிருக்கு விடை கிடைக்கும் வரை
உலகம் முழுதும் சுற்றுங்கள் ....;
உலகமே அழிந்து போகும் அந்த நாள் வரும் வரை
மனித குலத்தை காப்பாற்றுங்கள் ....;
எத்தனை யுகங்கள் தோன்றி மறைந்தாலும் ஒவ்வொரு
யுகத்தின் வரலாற்றை போற்றுங்கள் ....;
எத்தனை பிறவிகள் மண்ணில் பிறந்தாலும் இறந்தாலும்
மாறாது காலத்தின் அரங்கேற்றங்கள் ....!!!

அன்புடன்
சிவசுப்பிரமணியன் !

கவிதை 5 - பருவம்

*உள்ளம் தெளிவாகவும் அழுகை அழகாகவும் 
ஆரம்பிக்கும் குழந்தை பருவம் !
தோற்றம் கனிவாகவும் துணிச்சல் துள்ளலோடு 
முன்னேறும் பள்ளிப்பருவம் !
ஆற்றல் அறிவாகவும் மனம் காதலோடு கலந்து
வருடும் கல்லூரிப்பருவம் !

*ஆசை கனவுகளும் லட்சிய வெறியோடு வெற்றியை எட்ட
நினைக்கும் இளமை பருவம் !
தேடல் முயற்சிகளும் நம்பிக்கை உணர்வுகளோடு கஷ்டப்பட்டு
கிடைக்கும் வேலைப்பருவம் !
தித்திக்கும் இன்பமும் புரிதலும் வாழ்க்கைத்துணையோடு 
பயணமாகும் கல்யானப்பருவம் !

* குடும்பச்சுமைகளையும் எதிர்பார்ப்புகளையும் எதிர் நீச்சல் 
போட்டுக்கொண்டு அன்போடும் பாசத்தோடும் பரிவோடும்
நேசத்தோடும் நிறைந்த பக்குவத்துடன் முதுமை பருவம் !

நீங்கள் இப்போது எந்த பருவம் ???

அன்புடன்,
சிவசுப்பிரமணியன் !

சனி, 21 ஜனவரி, 2012

கவிதை 4 - வாழ்க்கை வரலாறு

கனவுகள் நிறைவேறுமா என்று கண்களில் ஏக்கம்,
லட்ச்சியத்தை அடைந்து விடுவோமா என்று மனதினில் தேக்கம்,

நம்பிக்கையை வர வழைக்க ஏன் இன்னும் தயக்கம்,
சோர்ந்து போய் விடுவோமா என்று சற்று மயக்கம்,

வின்னை எட்டி பிடிக்க பெற்றோர்கள் தருவது ஊக்கம்,
வெற்றி படியை தொட்டு விட்டால் உன் ஆயுள் தீர்க்கம்,
மகிழ்ச்சியின் உச்சியை அடைந்தால் காண்போம் சொர்க்கம்,

நேர்மையை வெளிப்படுத்த உறவுகள் காட்டுவது பாசம்,
ஆபத்திலும் உதவி செய்வது நண்பர்களின் நேசம்,

ஆசைகள் நிறைவேற வேண்டும் என்பது யாவர் விருப்பம்,
வாழ்க்கையின் அர்த்தத்தை தெரிந்து கொண்டால் அதுவே திருப்பம்,
சோகமான நினைவுகள் திரும்பவும் ஞாபகம் வந்தால் துயரம்,
எண்ணங்கள் வளர்த்துக்கொண்டால் புது விதமான அனுபவம்,
சிந்தித்து செயல்பட மாற்ற வேண்டும் உன் சுபாவம்,

உன்மையை மறைக்க ஏன் போட வேண்டும் வீன் வேஷம்,
நிம்மதி இருக்கும் இடத்தை நெருங்கினால் சந்தோஷம்,
மூட நம்பிக்கையை ஒழித்தால் அகன்று விடும் தோஷம்,
சுதந்திரம் பாதுகாக்க வேண்டிய நம் நாட்டின் பொக்கிஷம்,

பிரச்னை என்பது நமக்கு கிடைத்த வாய்ப்புக்களின் ஊர்வளம்,
மகிழ்ச்சிக்கு தேவையான புன்னகை தான் வாழ்வின் சொக்கத்தங்கம்,
 உழைத்து வாழும் போது கூடாது வீன் கர்வம்,

போட்டி என்று வந்து விட்டால் பயமின்றி வேண்டும் வீரம்,
பொறுமயை கடைபிடிக்கும் காலத்தில் எதற்க்கு கோபம்,
சாதனை படைக்க முழு கவனத்துடன் காட்டு ஆர்வம்,

முக்தி கிடைக்க நிதானத்துடன் தேவை கடுந்த்தவம்,
பெருமை தேடி கொடுத்தால் பெற்றோர்கள் படுவது ஆனந்தம்,
தவழும் குழந்தை தள்ளாடும்போது தாங்கி பிடிப்பது சொந்தம்,

ஊழலும், வறுமையும்,ஜாதிவேறுபாடும் தான் நாட்டின் சாபம்,
விடாமுயற்ச்சி தான் மனிதனின் பாதைக்கு முன்னேற்றம்,
அழிவில்லாத துனையாக புகழையும் செல்வத்தையும் கொடுப்பது அறம்,

இன்பமும் உயர்வும் தரும் அறிவு ஒளி தான் கல்விச்செல்வம்,
தோல்வியும் ஜெயமும் இரு பக்கங்கள் கொண்ட ஒரே நாணயம்,

சோதனைகளை முறியடிக்க உதவுவது முடியும் எனும் மந்திரம்,
வலிமை இல்லாத போது நம்க்கு தேவைப்படும் ஆயுதம் தந்திரம்,

பகை இல்லாமல் இருக்க வளர்த்து கொள்ள வேண்டும் அன்புக்குணம்,
புகழ் கிடைப்பதற்க்கு தீய செயல்களில் ஈடுபடுவது மாபெரும் குற்றம்,

உண்ர்ச்சிகளின் புத்தகத்தை புரட்டினால் கிடைக்கும் தத்துவம்,
அறிவுறைகளை நடைமுறையில் பயன்படுத்தினால் தான் மகத்துவம்,

கற்பனைகள் கொண்டு படைக்க இயலும் ஒரு சித்திரம்,
உலகம் உனக்கென எழுதட்டும் புது சரித்திரம்,

ஒரு நாடு வல்லரசாக மாறுவதற்க்கு இளைஞர்களின் வேகமும்,
ஒவ்வோரு குடிமகனது கடமையும், இன்றைய மொட்டுக்களான
மழலைகளின் ஞானமும், விவேகமும்,பகுத்தறிவும்,
 உருதுணையாக கலந்திருப்பது அவசியம் !!

சனி, 7 ஜனவரி, 2012

கவிதை 3- நட்புக்காக

நாம் சந்தித்த நாட்கள் முதல் .......
பார்க்க முடிந்தது கறுப்பு உருவத்திற்க்குள்

மறைந்து கிடக்கும் வெள்ளை மனசு,
ரசிக்க முடிந்தது அழகான புன்னகையோடு
அசராமல் அமைதியாக நீ அடித்த ரவுசு,
நேசிக்க முடிந்தது நீ செய்யும் குட்டி குறும்புகள் , அதனால் தான் என்னவோ உனக்கு நாள் தோறும் தனி
மவுசு ,
புகழும் பணமும் உன்னை உச்சத்துக்கு கொண்டு போனாலும்,
உன்னோட எளிமை குணத்திற்கு குறையாது சொகுசு,
உன்னுடன் உரையாடும் சில நொடிகளில்,
நீ பண்ணுகின்ற நகைச்சுவை கலாட்டா யாவும் புதுசு,

மதிப்பும் மரியாதையும் அள்ளி வீசும் நண்பனே !
உன் உள்ளத்தில் இடம் பிடிக்க தேவையில்லை சிபாரிசு ,
நன்றி சொன்னேன் அந்த கடவளுக்கு , உன்னை என் தோழனாக அடைந்ததற்கு !

நம் நட்பு பல்லாண்டு காலம் நீடித்து , சரித்திரத்தில் இடம் பிடித்தாலும், பிடிக்காமல் போனாலும் ,
நீ தான் எனக்கு கிடைத்த முதல் பரிசு !


இப்படிக்கு அன்புள்ள,
சிவசுப்பிரமணியன் !

வெள்ளி, 30 டிசம்பர், 2011

கவிதை 2 - வெல்க தோழமை

உணர்ச்சிகளை வெறும் மௌனத்தை வைத்தே புரிந்து கொள்ளும் என் ஆருயிர் தோழா ,
உன் மனக்கதவுகளை திறந்தே வைத்திருப்பதின் மாயமென்ன ....!
நிழல் கூட துணையில்லாத தருணங்களில் , நீ ஆறுதல் அளிக்கும் என் மனதிற்க்கு இனி காயமென்ன ....!

முரட்டு கோபத்தை அடக்கி வைத்திருக்கும் உன் மந்திர புன்னகை ,
மிஞ்சி விடுகறது விலை உயரும் பொன் நகையை ....!
அசட்டு தைரியத்தை அழகாக காட்டும் உன் கண்களின் சைகை ,
அசைக்க முடியாமல் செய்து விடும் மயில் தோகையை...!

பதட்டம் கொண்டு நெஞ்சம் தள்ளாடும் பொழுது ,
உன் காக்கும் கரங்கள் தருமே அடைக்கலம் ....!
கடினமான செயல்களை சுலபமாக செய்து விட்டு ,
அடக்கமாக நீ அமர்ந்திருப்பது அமர்க்களம் ...!

வியக்க வைக்கும் உன் மாறுபட்ட சிந்தனைகள் ,
 
நித்தம் ஒரு அர்த்தத்தை புரிய வைத்தது ....!
நெகிழ வைக்கும் உன் வேறுபட்ட விவாதங்கள் ,
புத்தம் புது பாடத்தை பதிய வைத்தது ....!

மகிழ்ச்சியை கடன் கேட்காமலே கொடுத்தாய் நீ எனக்கு ,
புகழ்ச்சியே வேண்டாம் என்று ஒதுங்கினாய் - மாபெரும் எளிமை உள்ளம் உனக்கு...!

சத்தமில்லாமல் சாதுர்யமாக அசாத்திய சாதனைகளை ,
கண் சிமிட்டும் தருணத்தில் முடித்து விட்டு ,
நீ மெல்ல சிரிக்கும் பொழுது யாவர் முகத்திலும்
பொங்கி வழிகிறது அடடா ஆச்சரியக்குறி...!

உனக்கு கிடைக்கும் வெற்றிகளுக்கு என்னிடமிருந்து ,
வாழ்த்து மடலோ வார்த்தை மழையோ தேவையில்லை என்றாய்..!
என் ஆழ் மனதில் துளிர் விட்டு கண்களில் சிந்தும்
ஆனந்த கண்ணீர் மட்டும் போதும் என்றாய் ....!

உன்னோடு பழகும் ஒவ்வொரு நொடியும்
 உற்சாகமூட்டும் சந்தொஷத்துளிகள் ...!
நம் நட்பை பார்த்து பேராசை படாமல்
இருந்தால் போதும் ஆயிரம் விழிகள்...!

பல விஷயங்களில் நம் அலை வரிசை ஒரு சேர சிந்தித்து
முடிவெடுக்க பலமடைகிறது நம் ஒற்றுமை ..!
அன்போடும் நம்பிக்கையோடும் என்றென்றும் அழிவில்லாமல்
வீர முழக்கத்தோடு தொடர்ந்து வெல்க நம் தோழமை.......!

அன்புடன்,
சிவசுப்பிரமணியன் !