கனவுகள்
நிறைவேறுமா என்று கண்களில் ஏக்கம்,
லட்ச்சியத்தை
அடைந்து விடுவோமா என்று மனதினில் தேக்கம்,
நம்பிக்கையை
வர வழைக்க ஏன் இன்னும் தயக்கம்,
சோர்ந்து
போய் விடுவோமா என்று சற்று மயக்கம்,
வின்னை
எட்டி பிடிக்க பெற்றோர்கள் தருவது ஊக்கம்,
வெற்றி
படியை தொட்டு விட்டால் உன் ஆயுள் தீர்க்கம்,
மகிழ்ச்சியின் உச்சியை
அடைந்தால் காண்போம் சொர்க்கம்,
நேர்மையை
வெளிப்படுத்த உறவுகள் காட்டுவது பாசம்,
ஆபத்திலும்
உதவி செய்வது நண்பர்களின் நேசம்,
ஆசைகள்
நிறைவேற வேண்டும் என்பது யாவர் விருப்பம்,
வாழ்க்கையின்
அர்த்தத்தை தெரிந்து
கொண்டால் அதுவே திருப்பம்,
சோகமான
நினைவுகள் திரும்பவும் ஞாபகம் வந்தால் துயரம்,
எண்ணங்கள்
வளர்த்துக்கொண்டால்
புது விதமான அனுபவம்,
சிந்தித்து
செயல்பட மாற்ற வேண்டும் உன் சுபாவம்,
உன்மையை
மறைக்க ஏன் போட வேண்டும் வீன் வேஷம்,
நிம்மதி
இருக்கும் இடத்தை நெருங்கினால் சந்தோஷம்,
மூட
நம்பிக்கையை ஒழித்தால் அகன்று விடும் தோஷம்,
சுதந்திரம்
பாதுகாக்க வேண்டிய நம் நாட்டின் பொக்கிஷம்,
பிரச்னை
என்பது நமக்கு கிடைத்த வாய்ப்புக்களின் ஊர்வளம்,
மகிழ்ச்சிக்கு தேவையான
புன்னகை தான் வாழ்வின் சொக்கத்தங்கம்,
உழைத்து
வாழும் போது கூடாது வீன் கர்வம்,
போட்டி
என்று வந்து விட்டால் பயமின்றி வேண்டும் வீரம்,
பொறுமயை
கடைபிடிக்கும்
காலத்தில் எதற்க்கு கோபம்,
சாதனை
படைக்க முழு கவனத்துடன் காட்டு ஆர்வம்,
முக்தி
கிடைக்க நிதானத்துடன் தேவை கடுந்த்தவம்,
பெருமை
தேடி கொடுத்தால் பெற்றோர்கள் படுவது ஆனந்தம்,
தவழும்
குழந்தை தள்ளாடும்போது தாங்கி பிடிப்பது சொந்தம்,
ஊழலும்,
வறுமையும்,ஜாதிவேறுபாடும் தான் நாட்டின் சாபம்,
விடாமுயற்ச்சி தான்
மனிதனின் பாதைக்கு முன்னேற்றம்,
அழிவில்லாத
துனையாக புகழையும் செல்வத்தையும் கொடுப்பது அறம்,
இன்பமும்
உயர்வும் தரும் அறிவு ஒளி தான் கல்விச்செல்வம்,
தோல்வியும்
ஜெயமும் இரு பக்கங்கள் கொண்ட ஒரே நாணயம்,
சோதனைகளை
முறியடிக்க உதவுவது முடியும் எனும் மந்திரம்,
வலிமை
இல்லாத போது நம்க்கு தேவைப்படும் ஆயுதம் தந்திரம்,
பகை
இல்லாமல் இருக்க வளர்த்து கொள்ள வேண்டும் அன்புக்குணம்,
புகழ்
கிடைப்பதற்க்கு
தீய செயல்களில் ஈடுபடுவது மாபெரும் குற்றம்,
உண்ர்ச்சிகளின் புத்தகத்தை
புரட்டினால் கிடைக்கும் தத்துவம்,
அறிவுறைகளை
நடைமுறையில் பயன்படுத்தினால் தான் மகத்துவம்,
கற்பனைகள்
கொண்டு படைக்க இயலும் ஒரு சித்திரம்,
உலகம்
உனக்கென எழுதட்டும் புது சரித்திரம்,
ஒரு
நாடு வல்லரசாக மாறுவதற்க்கு இளைஞர்களின் வேகமும்,
ஒவ்வோரு
குடிமகனது கடமையும், இன்றைய மொட்டுக்களான
மழலைகளின்
ஞானமும், விவேகமும்,பகுத்தறிவும்,
உருதுணையாக
கலந்திருப்பது
அவசியம் !!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக