சனி, 7 ஜனவரி, 2012

கவிதை 3- நட்புக்காக

நாம் சந்தித்த நாட்கள் முதல் .......
பார்க்க முடிந்தது கறுப்பு உருவத்திற்க்குள்

மறைந்து கிடக்கும் வெள்ளை மனசு,
ரசிக்க முடிந்தது அழகான புன்னகையோடு
அசராமல் அமைதியாக நீ அடித்த ரவுசு,
நேசிக்க முடிந்தது நீ செய்யும் குட்டி குறும்புகள் , அதனால் தான் என்னவோ உனக்கு நாள் தோறும் தனி
மவுசு ,
புகழும் பணமும் உன்னை உச்சத்துக்கு கொண்டு போனாலும்,
உன்னோட எளிமை குணத்திற்கு குறையாது சொகுசு,
உன்னுடன் உரையாடும் சில நொடிகளில்,
நீ பண்ணுகின்ற நகைச்சுவை கலாட்டா யாவும் புதுசு,

மதிப்பும் மரியாதையும் அள்ளி வீசும் நண்பனே !
உன் உள்ளத்தில் இடம் பிடிக்க தேவையில்லை சிபாரிசு ,
நன்றி சொன்னேன் அந்த கடவளுக்கு , உன்னை என் தோழனாக அடைந்ததற்கு !

நம் நட்பு பல்லாண்டு காலம் நீடித்து , சரித்திரத்தில் இடம் பிடித்தாலும், பிடிக்காமல் போனாலும் ,
நீ தான் எனக்கு கிடைத்த முதல் பரிசு !


இப்படிக்கு அன்புள்ள,
சிவசுப்பிரமணியன் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக