சனி, 21 ஜனவரி, 2012

கவிதை 4 - வாழ்க்கை வரலாறு

கனவுகள் நிறைவேறுமா என்று கண்களில் ஏக்கம்,
லட்ச்சியத்தை அடைந்து விடுவோமா என்று மனதினில் தேக்கம்,

நம்பிக்கையை வர வழைக்க ஏன் இன்னும் தயக்கம்,
சோர்ந்து போய் விடுவோமா என்று சற்று மயக்கம்,

வின்னை எட்டி பிடிக்க பெற்றோர்கள் தருவது ஊக்கம்,
வெற்றி படியை தொட்டு விட்டால் உன் ஆயுள் தீர்க்கம்,
மகிழ்ச்சியின் உச்சியை அடைந்தால் காண்போம் சொர்க்கம்,

நேர்மையை வெளிப்படுத்த உறவுகள் காட்டுவது பாசம்,
ஆபத்திலும் உதவி செய்வது நண்பர்களின் நேசம்,

ஆசைகள் நிறைவேற வேண்டும் என்பது யாவர் விருப்பம்,
வாழ்க்கையின் அர்த்தத்தை தெரிந்து கொண்டால் அதுவே திருப்பம்,
சோகமான நினைவுகள் திரும்பவும் ஞாபகம் வந்தால் துயரம்,
எண்ணங்கள் வளர்த்துக்கொண்டால் புது விதமான அனுபவம்,
சிந்தித்து செயல்பட மாற்ற வேண்டும் உன் சுபாவம்,

உன்மையை மறைக்க ஏன் போட வேண்டும் வீன் வேஷம்,
நிம்மதி இருக்கும் இடத்தை நெருங்கினால் சந்தோஷம்,
மூட நம்பிக்கையை ஒழித்தால் அகன்று விடும் தோஷம்,
சுதந்திரம் பாதுகாக்க வேண்டிய நம் நாட்டின் பொக்கிஷம்,

பிரச்னை என்பது நமக்கு கிடைத்த வாய்ப்புக்களின் ஊர்வளம்,
மகிழ்ச்சிக்கு தேவையான புன்னகை தான் வாழ்வின் சொக்கத்தங்கம்,
 உழைத்து வாழும் போது கூடாது வீன் கர்வம்,

போட்டி என்று வந்து விட்டால் பயமின்றி வேண்டும் வீரம்,
பொறுமயை கடைபிடிக்கும் காலத்தில் எதற்க்கு கோபம்,
சாதனை படைக்க முழு கவனத்துடன் காட்டு ஆர்வம்,

முக்தி கிடைக்க நிதானத்துடன் தேவை கடுந்த்தவம்,
பெருமை தேடி கொடுத்தால் பெற்றோர்கள் படுவது ஆனந்தம்,
தவழும் குழந்தை தள்ளாடும்போது தாங்கி பிடிப்பது சொந்தம்,

ஊழலும், வறுமையும்,ஜாதிவேறுபாடும் தான் நாட்டின் சாபம்,
விடாமுயற்ச்சி தான் மனிதனின் பாதைக்கு முன்னேற்றம்,
அழிவில்லாத துனையாக புகழையும் செல்வத்தையும் கொடுப்பது அறம்,

இன்பமும் உயர்வும் தரும் அறிவு ஒளி தான் கல்விச்செல்வம்,
தோல்வியும் ஜெயமும் இரு பக்கங்கள் கொண்ட ஒரே நாணயம்,

சோதனைகளை முறியடிக்க உதவுவது முடியும் எனும் மந்திரம்,
வலிமை இல்லாத போது நம்க்கு தேவைப்படும் ஆயுதம் தந்திரம்,

பகை இல்லாமல் இருக்க வளர்த்து கொள்ள வேண்டும் அன்புக்குணம்,
புகழ் கிடைப்பதற்க்கு தீய செயல்களில் ஈடுபடுவது மாபெரும் குற்றம்,

உண்ர்ச்சிகளின் புத்தகத்தை புரட்டினால் கிடைக்கும் தத்துவம்,
அறிவுறைகளை நடைமுறையில் பயன்படுத்தினால் தான் மகத்துவம்,

கற்பனைகள் கொண்டு படைக்க இயலும் ஒரு சித்திரம்,
உலகம் உனக்கென எழுதட்டும் புது சரித்திரம்,

ஒரு நாடு வல்லரசாக மாறுவதற்க்கு இளைஞர்களின் வேகமும்,
ஒவ்வோரு குடிமகனது கடமையும், இன்றைய மொட்டுக்களான
மழலைகளின் ஞானமும், விவேகமும்,பகுத்தறிவும்,
 உருதுணையாக கலந்திருப்பது அவசியம் !!

சனி, 7 ஜனவரி, 2012

கவிதை 3- நட்புக்காக

நாம் சந்தித்த நாட்கள் முதல் .......
பார்க்க முடிந்தது கறுப்பு உருவத்திற்க்குள்

மறைந்து கிடக்கும் வெள்ளை மனசு,
ரசிக்க முடிந்தது அழகான புன்னகையோடு
அசராமல் அமைதியாக நீ அடித்த ரவுசு,
நேசிக்க முடிந்தது நீ செய்யும் குட்டி குறும்புகள் , அதனால் தான் என்னவோ உனக்கு நாள் தோறும் தனி
மவுசு ,
புகழும் பணமும் உன்னை உச்சத்துக்கு கொண்டு போனாலும்,
உன்னோட எளிமை குணத்திற்கு குறையாது சொகுசு,
உன்னுடன் உரையாடும் சில நொடிகளில்,
நீ பண்ணுகின்ற நகைச்சுவை கலாட்டா யாவும் புதுசு,

மதிப்பும் மரியாதையும் அள்ளி வீசும் நண்பனே !
உன் உள்ளத்தில் இடம் பிடிக்க தேவையில்லை சிபாரிசு ,
நன்றி சொன்னேன் அந்த கடவளுக்கு , உன்னை என் தோழனாக அடைந்ததற்கு !

நம் நட்பு பல்லாண்டு காலம் நீடித்து , சரித்திரத்தில் இடம் பிடித்தாலும், பிடிக்காமல் போனாலும் ,
நீ தான் எனக்கு கிடைத்த முதல் பரிசு !


இப்படிக்கு அன்புள்ள,
சிவசுப்பிரமணியன் !

வெள்ளி, 30 டிசம்பர், 2011

கவிதை 2 - வெல்க தோழமை

உணர்ச்சிகளை வெறும் மௌனத்தை வைத்தே புரிந்து கொள்ளும் என் ஆருயிர் தோழா ,
உன் மனக்கதவுகளை திறந்தே வைத்திருப்பதின் மாயமென்ன ....!
நிழல் கூட துணையில்லாத தருணங்களில் , நீ ஆறுதல் அளிக்கும் என் மனதிற்க்கு இனி காயமென்ன ....!

முரட்டு கோபத்தை அடக்கி வைத்திருக்கும் உன் மந்திர புன்னகை ,
மிஞ்சி விடுகறது விலை உயரும் பொன் நகையை ....!
அசட்டு தைரியத்தை அழகாக காட்டும் உன் கண்களின் சைகை ,
அசைக்க முடியாமல் செய்து விடும் மயில் தோகையை...!

பதட்டம் கொண்டு நெஞ்சம் தள்ளாடும் பொழுது ,
உன் காக்கும் கரங்கள் தருமே அடைக்கலம் ....!
கடினமான செயல்களை சுலபமாக செய்து விட்டு ,
அடக்கமாக நீ அமர்ந்திருப்பது அமர்க்களம் ...!

வியக்க வைக்கும் உன் மாறுபட்ட சிந்தனைகள் ,
 
நித்தம் ஒரு அர்த்தத்தை புரிய வைத்தது ....!
நெகிழ வைக்கும் உன் வேறுபட்ட விவாதங்கள் ,
புத்தம் புது பாடத்தை பதிய வைத்தது ....!

மகிழ்ச்சியை கடன் கேட்காமலே கொடுத்தாய் நீ எனக்கு ,
புகழ்ச்சியே வேண்டாம் என்று ஒதுங்கினாய் - மாபெரும் எளிமை உள்ளம் உனக்கு...!

சத்தமில்லாமல் சாதுர்யமாக அசாத்திய சாதனைகளை ,
கண் சிமிட்டும் தருணத்தில் முடித்து விட்டு ,
நீ மெல்ல சிரிக்கும் பொழுது யாவர் முகத்திலும்
பொங்கி வழிகிறது அடடா ஆச்சரியக்குறி...!

உனக்கு கிடைக்கும் வெற்றிகளுக்கு என்னிடமிருந்து ,
வாழ்த்து மடலோ வார்த்தை மழையோ தேவையில்லை என்றாய்..!
என் ஆழ் மனதில் துளிர் விட்டு கண்களில் சிந்தும்
ஆனந்த கண்ணீர் மட்டும் போதும் என்றாய் ....!

உன்னோடு பழகும் ஒவ்வொரு நொடியும்
 உற்சாகமூட்டும் சந்தொஷத்துளிகள் ...!
நம் நட்பை பார்த்து பேராசை படாமல்
இருந்தால் போதும் ஆயிரம் விழிகள்...!

பல விஷயங்களில் நம் அலை வரிசை ஒரு சேர சிந்தித்து
முடிவெடுக்க பலமடைகிறது நம் ஒற்றுமை ..!
அன்போடும் நம்பிக்கையோடும் என்றென்றும் அழிவில்லாமல்
வீர முழக்கத்தோடு தொடர்ந்து வெல்க நம் தோழமை.......!

அன்புடன்,
சிவசுப்பிரமணியன் !

செவ்வாய், 24 பிப்ரவரி, 2009

கவிதை 1 - இயந்திர வாழ்க்கை

இயந்திர வாழ்க்கை

சூரியன் உதிக்கும் நேரம் குயிலோசை கூட கேட்க நேரமில்லாமல்,
காலை உணவு கூட சரியாக உட்கொள்ள முடியாமல்,
பரபரப்புடன் பேருந்தில் பயணம் செய்கையில்,
கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்டு தாமதமாக அலுவலகத்தின்
உள்ளே நுழைந்த பிறகு,
நகரும் நாற்காலியில் அமர்ந்து கொண்டு ,
ஆரம்பிக்கும் மென்பொருள் வித்தகர்களின் கணினி விளையாட்டு !

தகவல் தொழில் நுட்ப வழர்ச்சியின் விழுக்காடு குறைந்தாலும் ,
மென்பொருள் பொறியியளர்களின் வேலைப்பழு குறையாது !
ஒரு பக்கம் கைபேசியின் அழைப்பு விடாமல் நச்சரிக்க ,
மறு பக்கம் மேலதிகாரியின் கண்டிப்பு விடாமல் எச்சரிக்க,
எந்த பக்கமும் திரும்ப இயலாமல் ,
நேரம் கூட போவதறியாமல் ,
ஒரு மூலையில் உட்கார்ந்து மூளையை கசக்கும் வேலை தான் மிஞ்சியது !

நிறைவேறாத ஆசைகளும் கனவுகளும் மனதில் கொட்டிகிட்டக்க ,
கடந்தகால சறுக்கல்களும் எதிர்கால சிந்தனைகளும் மனதில் சிதறிகிடக்க,
குடும்பத்துடன் குதூகலமாக சில நாழிகைகள் செலவிட மனம் ஏங்குகிறது !

கல்லூரிக்காலங்களில் கை வலிக்க கைபேசியிலுருந்து ,
நண்பர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி ரசித்தோம்!
ஆனால் தற்பொழுது கைவலிக்க விசைப்பலகையிலிருந்து ,
கணினிக்கு புரிந்த நிரல் மொழிகளை அடுக்கி முழித்தோம்!

இயந்திரங்களை மனிதன் கண்டுபிடித்த பிறகு ,
மனிதன் இயந்திரமாக செயல் பட வேண்டிய சூழ்நிலை !
மந்திரங்களை மனிதன் ஓதி முடித்த பிறகு,
தந்திரங்களை விஞ்ஞான பூர்வமாக உலகத்திற்கு தெரிவிக்க வேண்டிய மனநிலை!

எல்லையில்லா ஆராய்ச்சிகளும் ,
தொல்லையில்லா கண்டுபிடிப்புகளும்,
இயந்திர வாழ்க்கையில் மனித இனத்தையும் குலத்தையும்,
சீர்குலைக்காமல் தொடரட்டும்!

நன்றி!

புதன், 28 ஜனவரி, 2009

கவிதை மழை பொழியட்டும்

தமிழ் மேல் ஆர்வம் கொண்ட அனைத்து தோழர்களுக்கு
இந்த கவிதை மழை சமர்ப்பணம் .


கவிதைகள்,கதைகள்,கட்டுரைகள் என்று அனைத்து தகவல்களையும்
இங்கே தொகுத்து வழங்கலாம்.


நான் செதுக்கி வைத்த சிந்தனைகளும் கற்பனைகளும் இனி இங்கு உலா வருவதை நீங்கள் படித்து ரசிக்கலாம்.உங்கள் கருத்துக்களையும் தெரிவிக்கலாம்.


நன்றி!


அன்புடன்,
சிவசுப்ரமணியன்.