திங்கள், 22 பிப்ரவரி, 2016

10 நொடி கதை 8 - சுயம்வரம்

2100 கி.பி பிரம்மாண்டமான மாளிகை முன் ஒரு நீண்ட வரிசையில் இளைஞர்கள் நின்று கொண்டிருந்தார்கள். மாளிகையின் வாசலில் ஒரு எந்திரன் ஒவ்வொரு இளைஞனையும் நிறம், இரத்த பிரிவு, எடை, உயரம், பழக்க வழக்கங்கள் என்று சோதனை செய்து கொண்டிருந்தது. மாளிகையின் உள்ளே மின்திரையில் 50% அறிவாளி, 20% புகை பிடிப்பவன், 30% மது அருந்துபவன் என்று புள்ளி விவரங்களை பார்வையிட்டாள் நல்ல மணமகனை எதிர்பார்க்கும் எந்திர பெண்.

--சிவசுப்பிரமணியன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக