ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

கவிதை 44 - மாசு

சீருந்தை சீறிட்டு செலுத்தும் 
அடுக்கு மாடி வீட்டு சீமான்கள்.

பேருந்தை பேரிரைச்சலோடு செலுத்தும் 
அரசு போக்குவரத்து போராளிகள்.

தானுந்தை புகை மண்டலமாக செலுத்தும்
மூன்று சக்கர வாகன மேதாவிகள்.

உந்துவளையை தலைக்கவசமில்லாமல் செலுத்தும்
இரு சக்கர வாகன நகர் பேசிகள்.

மிதிவண்டியை மறந்து விட்ட நவீன நடை பாதைகளில் 
மாசு படிந்த நகரத்தால் இயற்கையை மறந்து போன பாதசாரிகள்.

ஒலி ,ஒளி ,காற்று, நீர் என்று அனைத்திலும் கலந்து விட்ட மாசு,
கொஞ்சம் கொஞ்சமாக பறிக்கிறது மனிதனின் வயசு.

--சிவசுப்பிரமணியன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக