சனி, 7 ஜூன், 2014

கனவு 16 - கனவுக்குள் கனவு - முதல் கனவு

கண்ணுக்குள் நிலவு என்று கேள்வி பட்டிருப்பீர்கள். ஆனால் இது கனவுக்குள் கனவு. பொதுவாக பல கனவுகள் மாறி மாறி வரும். ஆனால் இந்த முறை ஒரு கனவுக்குள் வேறு கனவு வந்தது. 'Inception' படம் போல் பல நிலைகள் நான் கனவு கண்டேன் என்று தான் சொல்லலாம். ஆச்சரியமாகத்தான் இருந்தது நான் விழித்த பிறகு.

நானும் எனது நண்பனும் திக்கு தெரியாத காட்டில் ஏதோ இடம் தெரியாத பாதை வழியாக நள்ளிரவில் கும்மிருட்டில் நடந்து செல்கிறோம்.பிறகு ஒரு மலைச்சரிவில் மாட்டிக்கொண்டு தடுமாறி உருண்டு விழுகின்றோம்.வெகு நேரம் உருண்டு திரண்டு ஆங்காங்கே உடம்பெல்லாம் காயம் பெற்று ஒரு மழைச்சாரலும் சில்லருவியின் தீண்டலுடன் தொலைவில் தெரியும் ஒரு குக்கிராமம் ஒன்றில் சென்று சாய்ந்து விடுகிறோம்.



நான் ஒரு மாட்டு தொழுவின் அருகே தூக்கி வீசப்பட்டு சுய நினைவில்லாமல் சிதறி கிடப்பதை உணர்கிறேன்.என் நண்பன் அதே குடிசை வீட்டின் முன் வாசலில் உள்ள முள்செடிகள் நிறைந்த தோட்டத்தில் பலத்த காயங்களுடன் படுத்திருக்கிறான்.பிறகு அந்த குடிசையில் வாழும் பாட்டி எங்கள் காயங்களுக்கு மருந்திட்டு திரும்பி ஊர் செல்ல வழியும் சொன்னார்கள்.எப்படியோ வீடு வந்து சேர்ந்த பிறகு நல்ல தூக்கத்தில் ஆழ்ந்து விட்டேன். இங்கே தான் எனது இரண்டாம் கனவு ஆரம்பித்திருக்க வேண்டும்..

--- தொடரும் ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக