சனி, 13 ஜூலை, 2013

கனவு 14 - காட்சி 1 - பாதாள உலகம்

பல கனவுகள்  தொடர்ச்சியாக ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாமல் வருவதுண்டு.அது போல் வரும் காட்சிகள் நாம் கண் விழித்து பார்க்கும் பொழுது ஞாபகம் இருப்பதில்லை. இன்றும் அப்படிதான் இரு மாறுபட்ட காட்சிகள் , இடங்கள் , பயமுறுத்தும் நிகழ்வுகள் நடைபெற்றன.

காட்சி 1 - 

சுரங்க பாதை வழியாக ஒரு இருட்டு குகையை தேடி நான் தீப்பந்தம் ஏந்தி நடந்து செல்கிறேன். ஒரு கதவு என்னை பாதி வழியில் தடுத்து விடுகிறது. திரும்பி நடப்போம் என்று பின் பக்கம் முகத்தை திருப்புகிறேன்.
பேரதிர்ச்சியுடன் ஒரு வயதான மூதாட்டியின் உருவம். 

சூனியம் செய்யும் மாயக்கிழவியின் தோற்றம். கோரமான சிரிப்பொலி சுரங்கம் எங்கும் எதிரொலிக்கிறது. பிறகு என்னை அழைத்து கொண்டு பாதாள உலகம் செல்லும் வழியெங்கும் எலும்பு கூடுகள். இது என்ன விக்கிரமாதித்தன் வேதாளத்தோடு செல்லும் பயணம் போல் அல்லவா இருக்கிறது. 

பின் அந்த இருட்டு குகை சிறை போல் தோற்றம் அளித்தது. பிறகு என்ன  நடந்தது என்று நினைப்பதற்குள் அடுத்த காட்சி .....

                                                                                                            தொடரும் ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக