ஆவிகளோடு பேசும் பல முறைகளை நான் கேட்டதுண்டு, சில திரைப்படங்களில் பார்த்ததும் உண்டு. ஆனால் இந்த கனவில் நான் கண்டது மிகவும் புதுமையானது.
நான் ஒரு வீட்டு வாசலில் அமர்ந்திருக்கிறேன். வீட்டு முற்றம் தெள்ள தெளிவாக காட்சியளிக்கிறது. அங்கிருந்த கோலப்பொடி எடுத்து நான் ஏதோ எழுத முயற்சிக்கிறேன். "யார் ?" என்று கோலம் போடுகிறேன். மறுபுறத்தில் "உன் ஆச்சி" என்று பதில் வருகிறது. எனக்கோ திக்கென்றது. திடீர் என்று ஆவிகள் சூழ்ந்த உலகத்தில் அமர்ந்திருப்பது போல் உணருகிறேன்.
பிறகு கொஞ்சம் தைரியத்தை வரவழைத்து கொண்டு "நீங்கள் எந்த ஆச்சி ?" என்று கோலத்தால் கேட்கிறேன். சற்று தாமதமானாலும் பதில் வந்தது - "கனகம்மா".
நான் அசந்துபோய் அதிர்ச்சியில் சிலையானேன். ஏனென்றால் அந்த பெயர் எனது இறந்து போன ஒரு பாட்டியின் உண்மையான பெயர்.அடுத்து பல கேள்விகள் நான் கேட்பதற்குள் கனவு கலைந்து விட்டது .....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக