சனி, 23 மார்ச், 2013

கனவு 10 - சுனாமி

அதிர வைக்கும் நில நடுக்கம் மிக விரைவாக கடலின் ஆழத்தை கிழித்து கொண்டு நாங்கள் வசிக்கும் நகரத்தை நெருங்கிக்கொண்டு இருந்தது.கடலின் அருகில் முகாமிட்டிருந்த குடிசைகள் யாவும் தரைமட்டமாக மாறியிருந்தது.

அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் நானும் என் தம்பியும் மேல் தட்டு மொட்டை மாடி வரை ஓடிக்கொண்டும் - கடல் அலைகள் அச்சுறுத்தும் காட்சியை தொலைவில் பார்த்துக்கொண்டும் - அயல்வாசிகளை தப்பித்துக்கொள்ளும் படி எச்சரிக்கின்றோம்..

எனது கையில் அலைபேசியும் விடாமல் சிணுங்குகிறது.மனம் அலை பாயும் வேலையில் கடல் அலை ஆக்ரோஷமாக கட்டிடங்களை காலி செய்து கொண்டிருந்தது ! அனைவரும் தண்ணீருக்குள் மூழ்கிவிட்டு மீண்டும் மூச்சு விடுகின்றோம். எங்கும் கூக்குரல் அலையின் பேரிரைச்சலுக்கு போட்டியாக !!!

இது தான் உலகின் அழிவுக்கு ஆரம்பம் போலும் - பனை மரங்களும் வேரோடு மிதந்து செல்லும் போது தான் நினைக்க தோன்றியது - இதன் பெயர் சுனாமி என்று !!! இது தான் சுனாமியா என்று யோசித்து முழித்து பார்த்தால் கனவு கண்டேன் என்பது நினைவுக்கு வந்தது.

--சிவசுப்பிரமணியன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக