சனி, 13 ஜூலை, 2013

கனவு 14 - காட்சி 2 - நாடும் காடும்

காட்சி 2 

எங்கோ ஒரு நடுக்காட்டில் வெகு நேரமாக பிரயாணம் செய்து கொண்டிருக்கிறேன். வீட்டுக்கு திரும்ப செல்லும் வழி தொலைந்து போய் இப்படி அலைகிறேன் என்று வருத்தப்படுகிறேன். இரவு நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது.

திடீர் என்று இரு சிங்கங்கள் கர்ஜனையுடன் என் மேல் பாய்ந்தது. நானும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடுகின்றேன்.வேகமாக அங்கு தெரியும் மூங்கில் மரத்தில் எப்படியோ ஏறியும் விட்டேன். பல மரங்கள் அடுக்கு அடுக்காக நிற்கும் அடர்த்தியான காடு என்பதால் மரம் விட்டு மரம் தாவுகிறேன்.எப்படியோ தாவி தாவி நகர எல்லைக்கு வந்து சேருகிறேன்.

நல்ல நேரமாக அங்கு ஒரு ஏரி தெரிகிறது. என் தாகத்தை தனித்து விட்டு ஒற்றையடி பாதையில் நடக்கிறேன். உடனே அங்கு ஒரு பேருந்து வேகமாக செல்வது தெரிகிறது. அதில் எனது இரு நண்பர்கள் என்னை பார்த்து விட்டு பேருந்தை நிறுத்துகிறார்கள். எப்படியோ அதில் ஏறி கடைசியில் விடு வந்து நிம்மதி பெருமூச்சு விடுகிறேன்.

மீண்டும் பல காட்சிகள் தோன்றி மறைந்தது. அனால் ஞாபகம் வைத்த காட்சிகள் இப்படி எழுத்துக்களாக வடிவம் பெற்றது.

கனவு 14 - காட்சி 1 - பாதாள உலகம்

பல கனவுகள்  தொடர்ச்சியாக ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாமல் வருவதுண்டு.அது போல் வரும் காட்சிகள் நாம் கண் விழித்து பார்க்கும் பொழுது ஞாபகம் இருப்பதில்லை. இன்றும் அப்படிதான் இரு மாறுபட்ட காட்சிகள் , இடங்கள் , பயமுறுத்தும் நிகழ்வுகள் நடைபெற்றன.

காட்சி 1 - 

சுரங்க பாதை வழியாக ஒரு இருட்டு குகையை தேடி நான் தீப்பந்தம் ஏந்தி நடந்து செல்கிறேன். ஒரு கதவு என்னை பாதி வழியில் தடுத்து விடுகிறது. திரும்பி நடப்போம் என்று பின் பக்கம் முகத்தை திருப்புகிறேன்.
பேரதிர்ச்சியுடன் ஒரு வயதான மூதாட்டியின் உருவம். 

சூனியம் செய்யும் மாயக்கிழவியின் தோற்றம். கோரமான சிரிப்பொலி சுரங்கம் எங்கும் எதிரொலிக்கிறது. பிறகு என்னை அழைத்து கொண்டு பாதாள உலகம் செல்லும் வழியெங்கும் எலும்பு கூடுகள். இது என்ன விக்கிரமாதித்தன் வேதாளத்தோடு செல்லும் பயணம் போல் அல்லவா இருக்கிறது. 

பின் அந்த இருட்டு குகை சிறை போல் தோற்றம் அளித்தது. பிறகு என்ன  நடந்தது என்று நினைப்பதற்குள் அடுத்த காட்சி .....

                                                                                                            தொடரும் ....