ஞாயிறு, 25 அக்டோபர், 2015

கவிதை 46 - இயற்க்கை பாசம்

தந்தை சிங்கத்தின் தாடி பிடித்து,
சுட்டியாக விளையாடும் சிங்கக்குட்டிகள் !
தாய் யானையின் தும்பிக்கையை பிடித்து, 
குட்டி நடை போடும் யானைக்குட்டிகள் !

தாய் புலியின் நாவு வருடலை அன்போடு,
ஏற்றுக்கொள்ளும் புலிக்குட்டி !
தனது நெற்றியை தாய் நெற்றியோடு அழகாக,
ஒட்டிக்கொள்ளும் குட்டி ஒட்டகச்சிவங்கி !


அன்னை சிறுத்தையின் அரவணைப்போடு,
குறும்புகள் பல செய்யும் சிறுத்தைக்குட்டிகள் !
தாய் கங்காரு மடியிலிருந்து ஆர்வத்தோடு,
வெளியே எட்டிப்பார்க்கும் கங்காருக்குட்டிகள் !

தாயின் சமிக்ஞை அறிந்து சுறுசுறுப்போடு,
வேகமாக தாய்ப்பால் அருந்தும் புள்ளிமான் குட்டிகள் !
தாயின் பிடியிலிருந்து கீழே விழாமல் இருக்க,
இறுக்கமாக பிடித்து தொங்கும் குரங்குக்குட்டிகள் !

இரையை சமமாக பிரித்து பிஞ்சு வாய்க்குள் 
அக்கறையோடு உணவூட்டும் சிட்டுக்குருவிகள் !
கூட்டு குடும்பமாக வானில் சிறகை விரித்து,
சுதந்திரமாக பறக்கும் எத்தனையோ பறவைகள் !

விலங்குகள் வேட்டையாடும் காட்டுக்குள்,
கொட்டிக்கிடப்பது இயற்க்கை பாசமும் தான் ....

--சிவசுப்பிரமணியன்