“எழுந்து நட என் செல்லம்... அப்படி தான் என் சிங்க குட்டி”, தவழ்ந்து வந்த குழந்தைக்கு நடை பயிற்சி சொல்லிக்கொடுத்து விட்டு மிக அருகிலிருக்கும் மளிகைக்கடைக்கு தனது இரு சக்கர வாகனத்தை கிளப்பினார் அந்த குழந்தையின் தந்தை.
ரமேஷ் பதற்றத்துடன் காத்திருந்தான். அருகிலிருந்த பட்டதாரி ஒருவன் அவனிடம் பல விஷயங்களை கேட்டு நச்சரித்து கொண்டிருந்தான். நேர்முக தேர்வு அறைக்குள் நுழைந்தவனுக்கு அதிர்ச்சி. "நீங்கள் தேர்வாகிவிட்டீர்கள். மற்ற விவரங்கள் பேசுவோமா?" அவனுடன் பேசிய பட்டதாரி எதிரே நின்று கொண்டிருந்தார். --சிவசுப்பிரமணியன்
“அலாரம் அடிச்சது கூட தெரியாம அப்படி என்ன தூக்கம் வேண்டி கிடக்கு. சீக்கிரம் கிளம்பி ஸ்கூலுக்கு போடா!” 50 வயதை தாண்டிய பள்ளி முதல்வரை அக்கறையோடு எழுப்புகிற 70 வயது தாய்.
“இன்னைக்குள்ள கடவுள பார்த்திருலாமா?” வரிசையின் கடைசியில் நின்ன பக்தன் ஒருவன் கேட்டான். “உடல் முடியாம கூலி வேலை செய்யும் உன்னை பெற்ற தாயை முதலில் பார்.” என்றது ஒரு குரல். திரும்பி பார்த்தால் யாரும் இல்லை. --சிவசுப்பிரமணியன்