ஞாயிறு, 20 ஏப்ரல், 2014

கவிதை 43 - அங்கம் சொல்லும் புது அர்த்தம்

கண்கள்...
 கானாக்கரை தேடுதோ
 மனத்திரை காட்டுதோ 


கால்கள்...
  அறியா திக்குக்கு நடை போடுதோ
   புரியா பாட்டுக்கு நடனம் ஆடுதோ 


கைகள்...
   சிந்தனை சிற்பம் செதுக்குதோ
   கவிதையும் ஓவியமும் தீட்டுதோ


கை விரல்கள்...
   வீணை இசைப்பலகை மீட்டுதோ
   கணினி விசைப்பலகை பயிலுதோ 


செவிகள்...
  கேட்கா சொற்கள் கேட்குதோ
  கேட்கும் திறனை மறந்ததோ


மூக்கு...
   மாசு படிந்து மூச்சு வாங்க திணறுதோ
   இயற்க்கை வாசனை மறந்ததோ


நாக்கு...
   தாய் மொழி விட்டு கலப்பு மொழி பேசுதோ
    வீண் வம்புக்கு இழுக்குதோ 


மூளை...
  பயனற்ற தகவல் சேகரிக்கிறதோ
  செயற்கை நுண்ணறிவு படைக்குதோ


இதயம்...
  பிரிவா அன்பை நாடுதோ
   எதையும் தாங்கும் சக்தி பெற்றதோ

மற்ற அங்கங்களும் புது புது அர்த்தங்கள் சொல்லும்
-- சிவசுப்பிரமணியன் .....